முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > கட்டுரைகள் > ஒளிவட்டம் இழந்த ஆஸி.! சமாளிக்குமா இந்தியாவை?
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒளிவட்டம் இழந்த ஆஸி.! சமாளிக்குமா இந்தியாவை?
இல்லையெனில், ஒரு ஸ்லிப் ஒரு கல்லி, பயிண்ட், ஷாட் கவர், மிடாஃப் என்று நெருக்கமாக வைத்து விட்டு, 4 ஃபீல்டர்களை ஸ்கொயர் லெக், மிடான், மிட் விக்கெட் ஒரு டீப் ஸ்கொயர் லெக் என்று வைத்துக் கொண்டு ஸ்டம்புகளுக்கு போட்டு ஃபீல்டிங்கை நெருக்கமாக வைத்து இந்தியாவை பவுண்டரி அடிக்க விடாமல் வெறுப்பேற்றுவது.

webdunia photoFILE
இந்த பழைய கால முறைக்கு இந்திய பேட்ஸ்மென்கள் மடத்தனமாக ஒத்துப் போகுமாறு விளையாடினால்தான் ஆஸ்ட்ரேலியா வெற்றி பெறும் என்று இயன் சாப்பல் சமீபத்தில் எழுதியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் முன்பு போல் அதிரடி ஆட்டம் ஆடுவதில்லை, மாறாக மரபான பேட்டிங்கிற்கு அவர் திரும்பியுள்ளதாலும், எந்த கள உத்தி செய்தாலும் பவுண்டரி அடிக்க முடியக்கூடிய அவரது சிறப்புத் திறமையும் ஆஸ்ட்ரேலிய அணியின் இந்த ரன் கட்டுப்படுத்தும் உத்தியை மடத்தனமாக்கிவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் சுலபமாக சிங்கிள் எடுக்க முடிகிறதென்றால் சச்சின் பவுண்டரி அடிப்பதற்காக ரிஸ்க் எடுக்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். பலவீனமான பந்து வீச்சைக் கொண்டிருப்பதால், ஆஸ்ட்ரேலிய அணி இம்முறை பிரட் லீயை துருப்புச் சீட்டாக அதிரடி பந்து வீச்சிற்கு பயன்படுத்தி மற்றவர்களை ரன் கட்டுப்படுத்தும் விதமாகவே பயன்படுத்தும். இதிலும் சிக்கல் உள்ளது. அவ்வளவு வேகமாக பிரட் லீ வீசினால், காயமடைந்து 2-வது டெஸ்ட்... அல்ல தொடரையே துறக்க நேரிடலாம்.

ஆனால் ஆஸ்ட்ரேலிய அணி 2 சுழற்பந்து வீச்சாளை முழுதுமாக பயன்படுத்துவதுதான் சிறந்தது. ஏனெனில் சமீப காலமாக இந்திய மூத்த வீரர்கள் சுழற்பந்து வீச்சிற்கு மடிந்து வருகின்றனர். இந்த விதத்தில் சைமன்ட்ஸ் இல்லாதது அந்த அணியில் ஒரு மிகப்பெரிய ஓட்டையே.

இந்திய அணியின் பந்து வீச்சில் ஜாகீர் கான், இஷாந்த் ஷர்மா பெரிய அளவிற்கு ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், அவர்கள் அவ்வப்போது சில விக்கெட்டுகளை வீழ்த்தி அச்சுறுத்தும் திறமையுடையவர்கள். அனில் கும்ளே ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக இரண்டு நாடுகளிலுமே விக்கெட்டுகளை வீழ்த்திக் குவித்துள்ளார் என்றாலும், சமீபத்தில் அவர் இலங்கையில் வீசியதும், இரானி கோப்பை போட்டியில் வீசியதும் நிச்சயமாக திருப்திகரமாக இல்லை என்றே கூறவேண்டும். இவரை 'மார்க்' செய்து ஆஸ்ட்ரேலிய வீரர்கள் தாக்கினால் இந்திய பந்து வீச்சு அதன் மனோபலத்தை இழக்க நேரிடலாம், ஆனால் எல்லாம் கும்ளே கையில்தான் உள்ளது.

எனவே ஏறத்தாழ ஒரே மாதிரியான பேட்டிங் திறமைகள் கொண்ட அணிகளே இரு அணிகளும். ஒருவருக்கு ஒருவர் என்று ஒப்பிட்டு கூறிவிடலாம். ஆனால் பந்து வீச்சு? இதுதான் ஆஸ்ட்ரேலியாவின் முன் இன்று எழுந்துள்ள கேள்வி.

இந்த தொடரில் ஒரு டெஸ்டில் இரு முறை இந்திய அணியை வீழ்த்தும் பலம் ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சில் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் மறுபடியும் ஒரு கேள்வி, காயமும், அஜந்தா மென்டிஸ், முரளிதரன் ஆகியோர் "அந்த 4 பேர்" உத்திகளிலும் ஏற்படுத்திய ஓட்டைகளும் சந்தேகங்களும் பலமற்ற ஆஸ்ட்ரேலிய வீச்சை பலமானதாக மாற்றிவிடக்கூடியதோ?

சவாலான இந்த இரு கேள்விகளையும் இரு அணிகளும் எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதை பொறுத்து வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படும் என்பது உறுதி.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
<< 1 | 2 | 3 
மேலும்
பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் கங்கூலி, திராவிட் தர நிலை குறையும்?
ஆஸ்ட்ரேலிய அணியின் பலமும் பலவீனமும்!
தொடர்ந்து புறக்கணிக்கப்படும் முரளி கார்த்திக்!
கங்கூலி மீண்டும் பலிகடா?
ஒலிம்பிக்கிற்கு இடையே ஒரு தமாஷ் கிரிக்கெட்!
கபில் தேவ் புகைப்படம் அகற்றம்! தொடரும் பழிவாங்கல்!