முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > கட்டுரைகள் > ஒளிவட்டம் இழந்த ஆஸி.! சமாளிக்குமா இந்தியாவை?
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒளிவட்டம் இழந்த ஆஸி.! சமாளிக்குமா இந்தியாவை?
இந்திய ஆஸ்ட்ரேலிய தொடர் அதன் அனைத்து விதமான தொடருக்கு முந்தைய ஊதிப்பெருக்கல் கருத்துக் களத்திற்கிடையே இம்மாதம் 9ஆம் தேதி துவங்குகிறது. இன்னமும் நமது ஊடகங்கள் ஆஸ்ட்ரேலியாவை "வெல்ல முடியாத" (Invincible) என்ற முன் ஒட்டுடன் வர்ணித்து வருகின்றன.

நாம் கடந்த முறை ஆஸ்ட்ரேலியாவிற்கு சென்று விளையாடிய பிறகு, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும், சமீபமாக வங்கதேசத்திற்கு எதிராக மட்டும் ஆஸ்ட்ரேலியா விளையாடியுள்ளது. இந்த இரண்டு "சப்பை" அணிகளையும் அவர்கள் பந்தாடினார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இன்னமும் 'வெல்ல முடியாத' என்ற முன் ஒட்டிற்கு அந்த தகுதி பெற்றுள்ளதா என்றால் சந்தேகமே.

webdunia photoFILE
ஆஸ்ட்ரேலிய அணியின் மீது ஏற்றப்பட்ட இந்த ஒளிவட்டம் குறித்து மேத்யூ ஹெய்டன் கூறுகையில், அது கிரிக்கெட் ஆட்டத்தில் படிபடிப்படியாக பெற்ற ஒன்று, ஆனால் அது நிஜமாக இருக்க வேண்டிய தேவையில்லை என்று கூறியுள்ளார். முன்னாள் ஆஸ்ட்ரேலிய பயிற்சியாளரோ ஒளிவட்டம் இருந்ததாக ஒப்புக்கொண்டு அது தற்போது மங்கியுள்ளது என்கிறார். ஆனால் கடந்த முறை ஆஸ்ட்ரேலியாவில் இந்தியா விளையாடிய விதம் ஆஸ்ட்ரேலிய அணி வீரர்களிடம் நிறைய சுய சந்தேகங்களை எழுப்பியது என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.

எனவே இந்த தொடர் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும் என்று நம்பலாம். ஏனெனில் சுழற்பந்து வீச்சிற்கு எதிராக ஆஸ்ட்ரேலியாவின் பலவீனம் பயிற்சி போட்டியில் வெளிப்பட்டது. பயிற்சிப் போட்டிக்கு முந்தைய ராஜஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ஆஸ்ட்ரேலியா 218 ரன்களுக்கு சுருண்டது. வாரியத் தலைவர் அணிக்கு எதிராக பியூஷ் சாவ்லா, பிராக்யன் ஓஜா ஆகியோரிடம் திக்கித் திணறியது.

webdunia photoFILE
இத்தனைக்கும் நம் முன்னாள் பயிற்சியாளரும், தற்போதைய 'உளவாளி’யுமான கிரேக் சாப்பல், ரிக்கி பாண்டிங்கின் கண்களில் "எஃகினாலான மின்னொளியை" (Steely Glint) தேடிக் கண்டுபிடித்துள்ள போதும் சுழற்பந்து வீச்சிற்கு பாண்டிங்கின் மட்டையும் "எஃகினாலானது" போல் செயலற்று இருந்தது.

சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள கண்களில் மின்னொளியும் தேவையில்லை, அதிரடி ஆட்டமும் தேவையில்லை. நிதானம் தேவை. கிரேக் சாப்பலை விடவும் சற்றே செயல்பாட்டு ரீதியாக யோசிக்கும் இயன் சாப்பல் பாண்டிங்கிற்கு நிதானம்தான் தேவை என்றார். நான் உலக நாயகன் என்று மட்டையை நீட்டிக் கொண்டு செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
1 | 2 | 3  >>  
மேலும்
பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் கங்கூலி, திராவிட் தர நிலை குறையும்?
ஆஸ்ட்ரேலிய அணியின் பலமும் பலவீனமும்!
தொடர்ந்து புறக்கணிக்கப்படும் முரளி கார்த்திக்!
கங்கூலி மீண்டும் பலிகடா?
ஒலிம்பிக்கிற்கு இடையே ஒரு தமாஷ் கிரிக்கெட்!
கபில் தேவ் புகைப்படம் அகற்றம்! தொடரும் பழிவாங்கல்!