இங்கிலாந்தில் கிங்! இந்தியாவில் பகடை!
இதனை யோசித்த கார்த்திக் இங்கிலாந்து கவுண்டி அணியான மிடில்செக்ஸ் அணிக்கு கையெழுத்திட்டார். இருபதுக்கு 20 சாம்பியன் பட்டத்தை மிடில்செக்ஸ் வெல்ல முரளி கார்த்திக்கின் பந்து வீச்சு ஒரு முக்கிய காரணம். புரோ- 40 என்று அழைக்கப்படும் 40 ஓவர்கள் கிரிக்கெட்டில் 8 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை 20.75 என்ற சராசரி விகிதத்தில் கார்த்திக் எடுத்துள்ளார்.
மிடில்செக்ஸ் அணிக்கு விளையாடிய அயல் நாட்டு வீரர்களிலேயே, மேற்கிந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் டெஸ்மன்ட் ஹெய்ன்ஸிற்கு பிறகு சிறந்த வீரர் என்று அந்த கிளப் உயரதிகாரிகளால் கருதப்படுபவர் முரளி கார்த்திக்தான்.
மிடில்செக்ஸ் கவுண்டி சர்க்கிளில் இவரை "ஸ்பெஷல் ஒன்" என்று அழைத்து பெருமை சேர்த்துள்ளனர்.
மிடில்செக்ஸ் அணிக்கு அவர் தொடர்ந்து 3வது முறையாக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் அயல் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு இந்திய வீரருக்கு அவரது சொந்த மண்ணில் நடப்பதோ துரோகங்கள்!
டேனியல் வெட்டோரி, மோண்ட்டி பனேசர், நமது முரளி கார்த்திக், நிலேஷ் குல்கர்னி உட்பட உயர் தர இடது சுழற்பந்து வீச்சு மட்டுமல்ல, கென்யா அணியில் இடது கை சுழற்பந்து வீசிய அதிகம் அறியப்படாத ஆசிஃப் கரீம் என்பவரிடம் 1999, 2003, 2007 உலகக் கோப்பை சாம்பியன் அணி ஆஸ்ட்ரேலியா திணறியுள்ளது. 2003 உலகக் கோப்பை போட்டியில் ஆசிஃப் கரீம் 8 ஒவர்கள் வீசி 6 மைடன்களுடன் வெறும் 7 ரன்களே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒரு நேரத்தில் ஆஸ்திரேலியாவை தோல்வி அச்சமூட்டினர்.
இடது கை சுழற்பந்து என்றாலே நடுங்கும் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக முரளி கார்த்திக் பெயர் பரிசீலனை கூட செய்யப்படவில்லை என்பதற்கு கிரிக்கெட்டைத் தாண்டிய காரணங்களே பிரதானமாக இருந்திருக்கலாம் என்ற பலரின் சந்தேகம் நியாயமானதும் கூட!
|