முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > கட்டுரைகள் > கங்கூலி மீண்டும் பலிகடா?
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கங்கூலி மீண்டும் பலிகடா?
ஒப்பு நோக்குகையில் இந்த காலக்கட்டத்தில் செளரவ் கங்கூலி - அதாவது 2000-06ல் 58 டெஸ்ட் போட்டிகளில் சுமார் 3000 ரன்களையே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்பொழுது அவர் அணித் தலைவராக இருந்தார். இந்திய அணி அதிக டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தியது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

ஆனால் இதே காலக்கட்டத்தில் உலகிலேயே அதிக ரன்களை குவித்த மற்ற இரண்டு வீரர்கள் ரிக்கி பாண்டிங்கும், மொகமத் யூசுஃபும்தான். மற்ற இந்திய வீரர்களில் சச்சின் 61 டெஸ்ட்களில் 4,749 ரன்களை எடுத்துள்ளார். லக்ஷ்மண் 63 டெஸ்ட்களில் 4,238 ரன்களை எடுத்துள்ளார். சேவாகை நாம் இவர்கள் பட்டியலில் சேர்க்கமுடியாது. ஆனால் அவரும் இதே காலக்கட்டத்தில் 51 டெஸ்ட் போட்ட்களில் 4,111 ரன்களை சராசரி 50 உடன் எடுத்துள்ளார்.

இவர்களை ஒப்பு நோக்குகையில் கங்கூலி சற்று குறைவு என்பதை நாம் ஒப்புக் கொள்வோம். இதே புள்ளி விவரத்தை 2007ஆம் ஆண்டு நாம் கணக்கிட்டால் 10 போட்டிகளில் செளரவ் கங்குலி 1,106 ரன்களை 61.44 என்ற சராசரியுடன் பெற்றுள்ளார். திராவிடின் சராசரி 2007ல் இதே 10 போட்டிகளில் 35.64 மட்டுமே.

2006ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கருக்கு செளரவ் கங்கூலியைவிடவும் மோசமான ஆண்டு. 8 டெஸ்ட் போட்டிகளில் 267 ரன்களை 24.27 என்ற சராசரியில் பெற்றிருந்தார். இந்த காலக்கட்டத்தில்தான் பிரட் லீ இவரை விடவும் அதிக பேட்டிங் சராசரியை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2007ஆம் ஆண்டு மீண்டும் செளரவின் 60க்கும் மேற்பட்ட சராசரிக்கு எதிராக சச்சின் 9 டெஸ்ட் போட்டிகளில் 776 ரன்களை 55 என்ற சராசரியைப் பெற்றிருந்தார். 2008ஆம் ஆண்டு திராவிட், கங்கூலி இருவருக்குமே மோசமாக அமைய, சச்சினும் பெரிய அளவுக்கு ஒன்றும் செய்து விடவில்லை, ஆஸ்ட்ரேலிய தொடரையும் சேர்த்து 42.58 தான் இவரது சராசரி.

இப்போது இவர்களுக்கு ஆஸ்ட்ரேலிய தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என்றால் கங்கூலிக்கும் இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டியதுதான் என்று நாம் கூறலாம்.

மொத்தத்தில் அணித் தேர்வுகளில் எந்த ஒரு தர்க்கமும் அடிப்படையாக இருப்பதில்லை என்பதே நமக்கு இதன் மூலம் தெரிய வருகிறது. கங்கூலியை இவ்வாறு நடத்த வேண்டிய அவசியமில்லை. அவரை அழைத்து பேசி விடலாம். ஒரு நாள் போட்டிகளில் நன்றாக விளையாடிய போது தோனி அவரை வேண்டாம் என்றார். ஆனால் அதற்கான நியாயத்தை அவர் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறலாம்.

டெஸ்ட் போட்டியில் அணிக்கு மீண்டும் வந்த பிறகு செளரவ் தோல்வியடைந்த ஒரே தொடர் கடந்த இலங்கை தொடர் மட்டுமே. மற்ற வீரர்கள் அவ்வப்போது இது போன்ற தொடர் சரிவுகளையும் கண்டவர்களே, ஆனால் அவர்கள் ஏதோ தோல்வி காணாத வீரர்கள் போலவும், செளரவ் கங்கூலி மட்டுமே இது போன்ற சரிவிற்கு பழக்கப்பட்டவர் போலும் செய்வது நியாயமாகாது என்பதே நம் கருத்து.
<< 1 | 2 | 3 
மேலும்
ஒலிம்பிக்கிற்கு இடையே ஒரு தமாஷ் கிரிக்கெட்!
கபில் தேவ் புகைப்படம் அகற்றம்! தொடரும் பழிவாங்கல்!
ஆசிய ரசிகர்களிடம் ஐ.பி.எல்.லிற்கு பலத்த வரவேற்பு!
ஐ.பி.எல். கண்டெடுத்த முத்துக்கள்!
விஜய் மல்லையாவின் பிரச்சனை என்ன?
தேய்ந்து வரும் ஆட்ட உணர்வும், பாரம்பரியமும்!