முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > கட்டுரைகள் > ஒலிம்பிக்கிற்கு இடையே ஒரு தமாஷ் கிரிக்கெட்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒலிம்பிக்கிற்கு இடையே ஒரு தமாஷ் கிரிக்கெட்!
பீஜிங் ஒலிம்பிக் போட்டிகள் சுறுசுறுப்பாக விளையாடப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், பெல்ப்ஸ் போன்றவர்களின் உலக சாதனைகளை தொலைக்காட்சியில் மக்கள் ரசித்து வியந்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்கள் என்று ஒரு தமாஷ் வகையறா கிரிக்கெட் ‘சீரியசா’ ஆடப்பட்டு வருகிறது.

இதில் என்ன தமாஷ் இருக்கிறது என்று கேட்கலாம்! இரு அணிகளும் மாறி மாறி தோற்று ஒரு தமாஷை நடத்தி வருகின்றனர்.

webdunia photoFILE
ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான இளம் சிங்கங்கள், அஜந்தா மென்டிஸ் என்ற புரியாத புதிரிடம் வீழ்ந்தனர். ஆனால் உடனடியாக இலங்கையுடன் டெஸ்ட் போட்டி வருகிறது என்றவுடன், திராவிட் வந்திருக்காஹ, கங்கூலி வந்திருக்காஹ, லக்ஷ்மண் வந்திருக்காஹ மற்றும் நம் உலக நாயகன் சச்சின் வந்திருக்காஹ என்ற வடிவேல் ரக பீடிகையுடன் இலங்கைக்கு வந்திறங்கினர்.

முதல் டெஸ்டில் மீண்டும் முரளிதரன், அஜந்த மென்டிஸ் கூட்டணி நம் மாயண்ணங்களை கவிழ்த்தனர். 4ஆம் நாளிலேயே இரண்டாவது இன்னிங்சில் 136 ரன்களுக்கு சுருண்டனர்.

இரண்டாவது டெஸ்ட், இம்முறை தமாஷ் செய்தது இலங்கை. சேவாக் - உலகத்தரம் வாய்ந்த பெரும் தலைகள் இதுவரை ஆட முடியாத - ஒரு இன்னிங்சை ஆட, இலங்கை ஹர்பஜனிடமும், இஷாந்த் ஷர்மாவிடமும் வீழ்ந்தது. என்ன சச்சின், திராவிட், கங்கூலி போன்றவர்களை வைத்துக் கொண்டு உங்களால் மட்டும்தான் கேவலமாக தோற்க முடியுமா, அதுபோன்ற பெரிய தலைகள் இல்லாமலே எங்களாலும் கேவலமாக தோற்க முடியும் என்பதை நிரூபித்து மகேலா ஜெயவர்தனே தமாஷ் செய்தார்.

webdunia photoFILE
3-வது டெஸ்ட் சேவாக் விரைவில் பெவிலியன் திரும்ப, நடுவர் மறு பரீசிலனை முறை என்ற தமாஷ் அதன் உச்சத்தில் நடைபெற இந்தியா இம்முறை கேவலமாக தோற்பதில் தங்களை அடித்துக் கொள்ள உலகில் யாரும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்தனர். இதில் குறிப்பாக உலக நாயகன் சச்சின், 3 முறை மட்டையை கொண்டு வராமல் கால் காப்பில் வாங்கி மூன்று முறையும் நடுவர் மறுபரிசீலனையில் அதிர்ஷ்டவசமாக எல்.பி.டபிள்யூ ஆகாமல் தப்பினார்!

ஆனால் சச்சின் தப்புக் கணக்கு போட்டார். 3 முறை இலங்கை வேஸ்ட் செய்து விட்டது. இனிமேல் தனக்கு யாரும் அவுட் கொடுக்க முடியாது என்று முடிவெடுத்தார் போலும், 4வது முறையும் நேராக வந்த பந்தை கால் காப்பில் தடுத்தார். ஆனால் பாவம் இம்முறை கள நடுவரே கையை உயர்த்திவிட்டார். சச்சின் அதிர்ச்சி அடைந்தார். நடுவர் மறுபரிசீலனை வாய்ப்புகள் முடிந்து விட்டால் கள நடுவர் அவுட் கொடுக்க முடியாது என்று சச்சின் நினைத்து விட்டார் போலும்!

மீண்டும் காயம்! மீண்டும் தொடரிலிருந்து விலகல்... மீண்டும் வருவார், இந்த மீண்டும் கதை தொடர்ந்து கொண்டுதான் இருக்கப்போகிறது. அதுவரை நம்க்கும் தமாஷுக்கு குறைவில்லாமல்தான் இருக்கப்போகிறது.

சரி டெஸ்ட் தமாஷ் முடிந்ததா? வந்திறங்கின நமது இளம் சிங்கங்கள் ஒரு நாள் போட்டிகளுக்காக. மீண்டும் அஜந்த மென்டிஸ், ஆனால் இவரிடம் விக்கெட் கொடுத்துத்தான் ஆகவேன்டும் என்ற நிர்பந்தம் இந்திய வீரர்களுக்கு ஏற்பட்டு விட்டது! சரி! குலசேகரா என்ற ஒருவர் அவருக்கே என்ன போடுகிறார் என்று தெரிய வாய்ப்பில்லை, அவரது பந்து வீச்சில் மடிகின்றனர் நம்மவர்கள்.
1 | 2  >>  
மேலும்
கபில் தேவ் புகைப்படம் அகற்றம்! தொடரும் பழிவாங்கல்!
ஆசிய ரசிகர்களிடம் ஐ.பி.எல்.லிற்கு பலத்த வரவேற்பு!
ஐ.பி.எல். கண்டெடுத்த முத்துக்கள்!
விஜய் மல்லையாவின் பிரச்சனை என்ன?
தேய்ந்து வரும் ஆட்ட உணர்வும், பாரம்பரியமும்!
ச‌ச்‌சி‌ன் டெ‌‌ண்டு‌ல்க‌ர் பிறந்த நாள்!