முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கபில் தேவ் புகைப்படம் அகற்றம்! தொடரும் பழிவாங்கல்!  Search similar articles
பஞ்சாப் கிரிக்கெட் சங்கம், மொஹாலி விளையாட்டரங்கிலிருந்த இந்திய அணியி‌ன் முன்னாள் தலைவர் கபில் தேவ் ஓடி வந்து எம்பிக் குதித்து பந்து வீசுவது போல் உள்ள மிகப்பெரிய புகைப்படத்தை அகற்றியுள்ள செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

திடீரென கபில் தேவின் புகைப்படம் அகற்றப்பட்டது பற்றி பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் செயலரிடம்
webdunia photoFILE
கேட்கப்பட்டது. அதற்கு அவர் இந்த புகைப்படத்திற்கு வேறு ஒரு "பொருத்தமான" இடம் பார்த்து வருவதாக கூறியுள்ளார்.


ஆனால் மிகப்பெரிய இந்த அரிய புகைப்படத்தை அகற்றுவதன் நோக்கம் குறித்து கிரிக்கெட் ஆர்வலர்களிடையே பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்தியன் கிரிக்கெட் லீகை துவக்கி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை அவர் பகைத்துக்கொண்டததற்காக அவரது புகைப்படத்தை அகற்றி பி.சி.சி.ஐ. தனது பழி வாங்கும் செயலை தொடர்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்தியன் கிரிக்கெட் லீக் என்ற போட்டி அமைப்பைத் துவக்கி அதற்கு தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே கபில் தேவ் உட்பட அதில் விளையாடும் பல வீரர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் பல கேவலமான வேலைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) செய்து வருகிறது.

ஐ.சி.எல். உடன் இணைந்த முன்னாள் வீரர்களின் ஓய்வூதியத் தொகையை நிறுத்தியதிலிருந்து துவங்கி, ஐ.சி.எல். அணிகளில் விளையாடும் உள் நாட்டு வெளி நாட்டு வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. மற்றும் வெளி நாட்டு வாரியங்கள் அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளது. அதாவது இவர்கள் வேறு எந்த அதிகார பூர்வ போட்டிகளிலும் பங்கேற்க முடியாமல் செய்து விட்டது பி.சி.சி.ஐ.

மேலும் ஐ.சி.எல்-லில் விளையாடும் இளம் இந்திய வீரர்கள் பணியாற்றும் அலுவலகங்களுக்கு கிரிக்கெட் தினத்தன்று அவர்களுக்கு விடுமுறை அளிக்கவேண்டாம் என்றும் பி.சி.சி.ஐ. கூறியுள்ளது. இதனை கபில்தேவ் வன்மையாக கண்டித்திருந்தார் என்பதும் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளே.

சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு 20 போட்டிகளில், ஐ.பி.எல். இறுதிப் போட்டிகளில் விளையாடிய அணிகள் உட்பட ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் உள் நாட்டு இருபதுக்கு 20 போட்டியில் இறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் மோதவுள்ளன.

இப்போது அந்த உள் நாட்டு கிரிக்கெட் அணிகளில் ஐ.சி.எல். வீரர்கள் இருந்தால் அவர்கள் சாம்பியன்ஸ் லீகில் விளையாட தடை விதிக்கப்படும் என்று ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி கூறியுள்ளார்.

இப்படி வந்த செய்திகள் போக, மறைமுகமாக ஐ.சி.எல். கிரிக்கெட்டையும், அதில் விளையாடும் வீரர்களையும் கடுமையாக ஒடுக்குகிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

மொஹாலியில் நடைபெறும் எந்த சர்வதேச போட்டிகளுக்கும் கபில் தேவ் அழைக்கப்படுவதில்லை. மொஹாலி மட்டும்தானா அல்லது பிற மைதானங்களிலும் கபில் நுழைவதற்கு ஏதாவது மறைமுக தடை உத்தரவுகள் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
1 | 2  >>  
மேலும்
ஆசிய ரசிகர்களிடம் ஐ.பி.எல்.லிற்கு பலத்த வரவேற்பு!
ஐ.பி.எல். கண்டெடுத்த முத்துக்கள்!
விஜய் மல்லையாவின் பிரச்சனை என்ன?
தேய்ந்து வரும் ஆட்ட உணர்வும், பாரம்பரியமும்!
ச‌ச்‌சி‌ன் டெ‌‌ண்டு‌ல்க‌ர் பிறந்த நாள்!
ஐ.பி.எல். என்ற கிரிக்கெட் - பாலிவுட் பெருங்கூத்து!