ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் கிரிக்கெட்டே நாடகமான பிறகு தற்போது அணியை ஏலம் எடுத்தவர்கள் எழுப்பும் முழக்கங்களும், கொடுக்கும் பேட்டிகளும் அடுத்த கட்ட நாடகத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருப்பதை காட்டுகிறது.
சமீபத்தில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் உரிமைதாரர் விஜய் மல்லையா, அணித் தலைவர் திராவிடும், அப்போதைய அணியின் தலைமை செயல் அதிகாரியுமான சாரு ஷர்மாவும் தங்கள் விருப்பதிற்கிணங்க அணியை தேர்வு செய்தனர் என்றும், தான் வைத்திருந்த நட்சத்திர வீரர்கள் பட்டியலை வேண்டுமென்றே புறக்கணித்தனர் என்றும் தனியார் தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது அந்த அணி கிரிக்கெட் ஆட்டத்தில் செய்த சொதப்பல் காரணமாகவா? அல்லது இதுவும் ஒரு வணிகத் தோல்வியாக பார்க்கப்படுகிறதா என்ற கேள்வி எழுவது நியாயமே.
ஒவ்வொரு அணிக்காகவும் அதன் உரிமைதாரர்கள் வீரர்கள் மீது ஏகப்பட்ட பணத்தை முதலீடு செய்கின்றனர். எதற்கு? வீரர்களின் வாழ்வாதார சக்திகளை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அழகு பார்ப்பதற்காகவா? ஒரு போதும் இல்லை.
ஒரு குறிப்பிட்ட வீரர் மீது கோடிக்காணக்கான தொகை முதலீடு செய்யப்படுகிறது என்றால், வீரர்களின் ஆட்டத் திறனை பொறுத்து அவர்களது பரிமாற்ற மதிப்பு கூடுகிறது. அதாவது மேத்யூ ஹெய்டன் இந்த தொடரில் அதிகபட்சமாக ரன்களை குவித்து சிறந்த பேட்ஸ்மெனாக இருந்தால். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமைதாரர் அவரை வேறு அணிக்கு விற்க பலத்த தொகையை நிர்ணயிக்கலாம். உதாரணமாக தோனியின் விலை 9 கோடி என்றால் அடுத்த முறை 15 அல்லது 20 கோடி கொடுத்தால் வேறு அணிக்கு அவரை ஒப்படைக்கிறேன் என்று நிர்ணயம் செய்யலாம்.
தற்போது பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் உரிமைதாரரும் தொழில் அதிபருமான விஜய் மல்லையா, தன் அணி சரியில்லை, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது, அரையிறுதி வாய்ப்பு பறிபோனது என்றெல்லாம் கூறி திராவிடும், நீக்கப்பட்ட அணியின் தலைமைச் செயல் அதிகாரி சாரு ஷர்மாவும் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும்
|