முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தேய்ந்து வரும் ஆட்ட உணர்வும், பாரம்பரியமும்!
ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை தாக்கியதும், செளரவ் கங்கூலி பற்றி தேவையற்ற கருத்துக் கூறி ஒரு சர்ச்சையை ஷேன் வார்ன் உருவாக்கியதும் அழிந்து வரும் கிரிக்கெட் ஆட்ட உணர்வுகளுக்கு மேலும் ஏற்பட்டுள்ள சவால்களாகும்.

கடந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் மேட்டராஸி என்ன செய்தார் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் ஃபிரான்ஸ் வீரர் ஜிடேன் அவரை தாக்கி அது பின்பு பெரிய பிரச்சனையாக எழுந்து ஓய்ந்தது.

sresanth
webdunia photoWD
பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர் சக வீரர் மொகமது ஆசிஃபை மட்டையால் சரமரியாக அடித்த போது அஃப்ரீடி தடுத்திருக்கிறார். தனது நடத்தைக்காக மேலும் தடைகளைப் பெற்று சர்வதேச கிரிக்கெட்டில் தனிமைபட்டு நிற்கிறார் அக்தர். தற்போது ஐ.பி.எல். பண விழாவில் நடைபெற்ற ஒரு போட்டியில் சர்ச்சைத் திலகம் ஹர்பஜன் சிங் இன்னொரு சர்ச்சைத் திலகமான ஸ்ரீசாந்தை கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார்.

முன்னவர் 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டார். நம்மவர் 11 ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடசெய்யப்பட்டுள்ளார்.

இஷாந்த் ஷர்மாவை மேத்யூ ஹெய்டன் குத்துச் சண்டை வளையத்திற்கு அழைக்கிறார். ஆனால் தண்டனையிலிருந்து தப்பவிடப்பட்டார்.

இந்திய கிரிக்கெடில் இதற்கு முன்னுதாரணம் உண்டு. முன்பொரு முறை மும்பையைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரஷித் படேல் உள் நாட்டு போட்டி ஒன்றில் மறைந்த ராமன் லாம்பாவை துரத்தி துரத்தி அடிக்க முயன்றார். இதனால் ரஷித் படேல் வாழ் நாள் முழுதும் தடை செய்யப்பட்டார்.

ஜாவேத் மியாண்டட் டெனிஸ் லில்லியை மட்டையை ஓங்கிக் கொண்டு அடிக்கத் துரத்தியதும், கிளென் மெக்ரா,
1 | 2 | 3  >>  
மேலும்
ச‌ச்‌சி‌ன் டெ‌‌ண்டு‌ல்க‌ர் பிறந்த நாள்!
ஐ.பி.எல். என்ற கிரிக்கெட் - பாலிவுட் பெருங்கூத்து!
இந்திய அணி தோல்வி : கவாஸ்கர் கடும் விமர்சனம்!
தெளிவான திட்டத்துடன் சீறியது தென் ஆப்பிரிக்கா!
டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உயிர் கொடுங்கள்!
கவாஸ்கருக்கு நெருக்கடி தரும் ஐ.சி.சி.யின் அராஜகம்!