முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கவாஸ்கருக்கு நெருக்கடி தரும் ஐ.சி.சி.யின் அராஜகம்!
படிக்கச் செல்வதற்கு முன்:

gavaskar
webdunia photoWD
கவாஸ்கர் ஐ.சி.சி பதவியிலிருந்து விலக கேட்டுக்கொள்ளப்படுவார் என்ற செய்தியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நிரஞ்சன் ஷாவும் பொருளாளர் ஸ்ரீனிவாசனும் மறுத்துள்ளனர். அதாவது ஐ.சி.சி.யிடமிருந்து தங்களுக்கு இது போன்ற தகவல்கள் எதுவும் இல்லை என்றும் இந்த செய்திகள் தவறானவை என்றும் ஐ.ி.ி. செய்யாஒன்றகுறித்ததாங்களகருத்தகூமுடியாதஎன்றும் இவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த மறுப்பு பற்றி சந்தேகங்கள் எழுகின்றன. ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் இன்று வர்ணனையாளர் கிறிஸ்டோஃபர் மார்டின் ஜென்கின்ஸ் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் துபாயில் கடந்த வாரம் நடைபெற்ற ஐ.சி.சி. உயர்மட்ட செயற் குழு கூட்டத்தில் கவாஸ்கரை பதவி விலகக் கோருவதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

வாக்கெடுப்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் தனது வாக்கை அளித்திருக்க வேண்டும். கவாஸ்கர் குறித்த முடிவிற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததோ இல்லையோ அது வேறு, அதுபோன்ற விவாதமே நிகழவில்லை என்கிற ரீதியில் நிரஞ்சன் ஷாவும் ஸ்ரீனிவாசனும் கூறியிருப்பதன் நோக்கம் என்னவென்று புரியவில்லை. இதனால் கவாஸ்கர் பற்றிய முடிவை ஐ.சி.சி. எடுத்துள்ளது என்ற முடிவுக்கு நாம் வருவதை தவிர்க்க முடியாது.

எங்களுக்கு கிடைத்த உறுதியான செய்தியை அடிப்படையாக்க் கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

-------------------------------------------------

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து வரும் சுனில் கவாஸ்கர் ஐ.சி.சி-யின் ஒரு தலைபட்சமான செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார், தொடர்ந்து விமர்சித்தும் வருகிறார். இதனால் எரிச்சலடைந்துள்ள ஐ.சி.சி. உயர்மட்டக் குழு, தலைமை செயல் அதிகாரி மால்கம் ஸ்பீடிடம் இந்த கவாஸ்கரை ஏதாவது செய்யவேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளது.

உடனே ஐ.சி.சி., ஒன்று கவாஸ்கர் ஐ.சி.சி. பொறுப்பில் இருக்கவேண்டும், அல்லது வர்ணனையாளராக, பத்தி எழுத்தாளராக இருக்கவேண்டும், இரண்டு பொறுப்புகளிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது என்று நெருக்கடி கொடுத்துள்ளது. இதனால் அடுத்த வாரம் மால்கம் ஸ்பீடை சுனில் கவாஸ்கர் துபாயில் சந்திக்கும்போது தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவாஸ்கர் அப்படி என்ன தவறு செய்தார்?

இந்திய - ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கிடையே நடந்து முடிந்த தொடரில் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் மீது நிறவெறிப் புகார் எழுப்பப்பட்டபோது, அதனை விசாரித்த ஆட்ட நடுவர் மைக் புரோக்டர், ஆஸ்ட்ரேலிய வீரர்கள் தரப்பு வாதத்தை மட்டுமே காது கொடுத்துக் கேட்டது, இந்திய தரப்பு வாதங்களை ஒப்புக்கு கூட கேட்கவில்லை. அதுவும் சச்சின் டெண்டுல்கர் போன்ற ஒரு மரியாதைக்குறிய ஆட்டக்காரர் கூறியதைக் கூட புரோக்டர் காது கொடுத்து கேட்கவில்லை.

sachin
webdunia photoWD
இது கவாஸ்கரின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. "வெள்ளை ஆட்ட நடுவர் ஒருவர் வெள்ளை வீரர்கள் கூறுவதை மட்டும் எடுத்துக் கொள்கிறார் என்று தனக்கு தினமும் மின்னஞ்சல்களும் குறுஞ்செய்திகளும் தொலைபேசி அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. எந்த ஒரு தொழில் நுட்பமும் நிரூபிக்க முடியாததை குற்றம் என்று எப்படி தீர்ப்பளிக்க முடியும்? அதுவும் கிரிக்கெட் ஆட்ட வரலாற்றின் ஒரு மிகப்பெரிய வீரர் சச்சின் டெண்டுல்கரின் வார்த்தை கேட்கப்படவில்லை என்பது கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆவேசத்தை கிளப்பியுள்ளது" என்று கவாஸ்கர் மிகவும் நிதானமாக கூறினார். அவர் எங்கு இதில் மைக் ப்ரோக்டரை நிறவெறியாளர் என்று கூறியிருக்கிறார்?

1 | 2  >>  
மேலும்
புதிய இந்திய அணியை சந்திக்கிறது தென் ஆப்பிரிக்கா!
அகந்தையை அடக்கு வாய் தோனி!
டேரல் ஹேர் : ஐ.சி.சி. அந்தர்பல்டி!
இந்தியத் தொலைக்காட்சிகளை பிடித்து ஆட்டும் மூன்று!
இந்திய வெற்றி! இளமையின் வெற்றி!
ஆஸி.க்கும் காசேதான் கடவுளடா?