முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆஸி.க்கும் காசேதான் கடவுளடா?
dhoni
webdunia photoWD
இந்திய பிரிமியர் லீக் என்ற பணமரம் கிரிக்கெட் வீரர்கள் வீட்டில் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டியுள்ளது. ஆஸ்ட்ரேலிய வீரர் ஆன்ட்ரூ சைமன்ட்ஸ் 1.47 மில்லியன் டாலர்கள் விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். எம்.எஸ்.தோனி அனைவரையும் விட அதிக விலைக்கு ஏலம் போயுள்ளார்.

ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகள் ஆஸ்ட்ரேலிய வீரர்களிடையே ஒரு முக்கிய பரிமாணத்தை எட்டியுள்ளது. காரணம் உலகின் தலைசிறந்த கேப்டனாகவும், பேட்ஸ்மெனாகவும் ஃபீல்டராகவும் கருதப்படும் ரிக்கி பாண்டிங் வெறும் 4,36,000 டாலர்களுக்கே விலை போயுள்ளார்.

சைமன்ட்ஸ் தான் ஏலம் எடுக்கப்பட்ட தொகை குறித்து கூறுகையில் "நான் கேட்கவில்லை, அவர்களாக எனக்கு கொடுக்க முன்வருவது இது" என்று கூற, ரிக்கி பாண்டிங்கோ மிகவும் பரிதாபமாக,"நான் ஏமாற்றமடைந்துள்ளேன், நான் இன்னமும் சிறிது விலை போவேன் என்றுதான் நினைத்தேன், இந்திய மக்கள் என்னை நன்றாகவே வரவேற்றுள்ளனர், நான் அங்கு செல்லும்போதெல்லாம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, இருப்பினும் இந்த குறைந்த தொகை ஏமாற்றமே அளிக்கிறது. எனது மனத்தில் கடந்த 2 நாட்களாக இது பற்றிய எண்ணங்கள் அதிகம் ஆக்ரமித்துள்ளத” என்று கூறியுள்ள பாண்டிங்,

இன்னமும் மேலே போய் சற்றும் எதிர்பாராதவிதமாக, ஹர்பஜன் விவகாரமும் இதற்கு காரணமாயிருக்கலாம் என்றும், இன்னமும் மேலே போய் "இதில் -சைமன்ட்சும்தானே ஈடுபட்டார்" என்று புலம்பித் தள்ளியுள்ளார்.

பாண்டிங்கின் இந்த புலம்பலுக்கு காரணம் ஆஸ்ட்ரேலிய உள் நாட்டு வீரர்களான கேமரூன் ஒயிட் 5,44,000 டாலர்களுக்கும், டெஸ்ட், ஒரு நாள் எதிலும் இன்னமும் ஆடாத டேவிட் ஹஸ்ஸி 7,38,000 டாலர்களுக்கும் விலை போயுள்ளனர் என்பதே. பாண்டிங் என்னதான் விளையாட்டுக்கு கூறுகிறேன் என்று அந்த நாட்டு ஊடகங்களை ஏமாற்றினாலும், பணம் படுத்தும் பாடு நாம் அறியாததா என்ன?

பாண்டிங் மேலும் இது பற்றி தன் ஓய்வறை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கையில், இந்த ஐ.பி.எல். பண விவகாரம் அணியினரிடையே பிளவுகளை ஏற்படுத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளது மட்டுமல்லாது, சைமன்ட்ஸ் ஒரே நாளில் கோடிகளுக்கு சொந்தமானது தனக்கும் ஹெய்டனுக்கும் மட்டும்தான் பொறாமையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் நாங்கள் இருவரும் அந்த மாதிரி நபர்கள் இல்லை என்று வேறு கூறியுள்ளார்.

ponting
webdunia photoWD
உளவியலின் அடிப்படைகளின் படி, நாம் எதனை வலிந்து மறுக்கிறோமோ, அந்த சிந்தனை அல்லது எண்ணம் நம் ஆழ் மனதில் நிலைபெற்ற ஒன்றே. அழிக்க முடியாத ஒன்றே. பாண்டிங் தனக்கு இல்லை என்று கூறும் பொறாமையும், அவ்வாறு அவர் ஆழ் மனதில் நிலையாக குடிகொண்டிருக்கும் ஒரு விஷயமே.

இவர் நிலை இப்படியென்றால், மைக்கேல் கிளார்க், மிட்சல் ஜான்சன் போன்றோர் தங்களுக்கு ஐ.பி.எல்.-ஐ விட நாடுதான் முக்கியம் என்று கூறி ஒதுங்கிவிட்டனர். ஒரே ஓய்வறையில் நாட்டிற்காக அர்ப்பணிக்கும் இரு வீரர்கள், புதிதாக அணிக்கு வரும் வீரர்கள், சைமன்ட்ஸ் என்ற கோடீஸ்வரர், பொறாமை கொள்ளலாம் என்று அதற்கான சாத்தியங்களை சூசகமாக் தெரிவித்த கேப்டன் பாண்டிங் மற்றும் மேத்யூ ஹெய்டன் ஆகியோர் இருந்து கொண்டு எங்களிடையே வேற்றுமை இல்லை என்று கூறினால், இது காதில் பூ சுற்றும் வேலைதான்.
1 | 2  >>  
மேலும்
வணிக மயமாகும் கிரிக்கெட்! வளருமா? தேயுமா?
சாப்பல் வழியில் தோனி?
சைமன்ட்சின் சிலிர்க்க வைக்கும் நேர்மை!
ஆஸி. இயந்திரத்தை உடைத்த இந்தியா!
முடிந்தும் முடியாமல் தொடரும் நிறவெறி விவகாரம்!
பீட்டர் ரீபக் வாதம் நியாயமானதா?