இந்த வார புனிதப் பயணத்தில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நர்மதை நதி பாய்ந்தோடும் ஹேமாவர் நகரத்தில் உள்ள புனித சிவ தலத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.
இந்த கோயில் சித்தநாத் மஹாதேவ கோயில் என்று பலராலும் அறியப்படுகிறது.
சனந்த், சனக், சனாதன், சனத் குமார் என்ற நான்கு சித்த ரிஷிகளால் இந்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இந்த கோயிலுக்கு சித்தநாத் கோயில் என்று பெயர் வந்தது.
இந்த கோயில் கி.மு. 3094ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக இதன் வரலாறு கூறுகிறது. அப்போது இந்த கோயில் கிழக்கு திசை நோக்கி இருந்ததாகவும், பின்னர் பாண்டவர் ஆட்சியின் போது பீமா, இந்தக் கோயிலின் வாயிற்புறத்தை மேற்கு நோக்கித் திருப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் காலை வேளையில் இந்த நதிக்கரையோரத்தில் பன்றிகளின் காலடித் தடங்கள் இருக்கின்றன. இவைகள் சனகதிக் ரிஷிகளின் காலடித் தடங்கள் என்று அங்கிருப்பவர்கள் நம்புகின்றனர். மேலும், தோல் நோய் இருப்பவர்கள் இந்த மண்ணில் அங்கப்பிரதஷ்ணம் செய்வதன் மூலம் தங்களது நோய் குணமாகும் என்றும் நம்புகின்றனர்.
மேலும், அப்பகுதிக்கு அருகே உள்ள குன்றுகளில் பல துறவிகள் வாழ்வதாகவும், அவர்கள் காலை வேளையில் இங்கு வந்து நர்மதையில் நீராடிச் செல்வதாகவும் அப்பகுதியில் வாழ்பவர்கள் கூறுகின்றனர்.
|