முதன்மை பக்கம் > ஆன்மிகம் > புனிதப் பயணம் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் வைத்தியநாத சுவாமி!
- கா. அய்யநாதன், புகைப்படங்கள் : சீனி.
webdunia photoWD
திருச்சாந்துருண்டை!

இவ்வளவு சிறப்புக்களைப் பெற்ற இப்புனித தலத்தில்தான், சித்த வைத்தியம் கூறிடும் இப்புவியில் மனிதனை வாட்டும் 4,480 நோய்களையும் குணமாக்கிடும் மருத்துவத்தை சிவபெருமானே தனது சக்தியுடன் வந்து அருளினார் என்று தலப்புராணம் கூறுகிறது. சஞ்சீவி, தயிலம், வில்வ மரத்தின் வேர் மண் ஆகியவற்றின் கூட்டால் தயாரிக்கப்பட்ட மருந்தினையே எல்லா நோய்களுக்கும் தீர்வாக சிவபெருமான் வழங்கியதாக திருத்தலப் புராணம் பகர்கிறது.

வில்வத்தையும், சந்தனத்தையும், விபூதியையும் கலந்தளித்து சிவபெருமான் வழங்கிய மருந்தே எல்லா நோய்களையும் தீர்த்த்தென்றும் கூறப்படுகிறது.

இன்றைக்கும் அப்படிப்பட்ட (எல்லா நோய்களையும் தீர்க்கவல்ல) மருந்தை தயாரிக்கும் முறை இங்கு நடைமுறையில் இருந்துவருகிறது. தங்களை பீடித்துள்ள நோயை குணப்படித்திக்கொள்ள இத்திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், சுக்ல பட்ச திதியில் இங்குள்ள அங்கசந்தான தீர்த்தத்தில் நீராடிவிட்டு, அக்குளத்தின் மண்ணை எடுத்துக் கொண்டு கரையேறி, ஜடாயு குண்டத்தில் அளிக்கப்படும் விபூதியைப் பெற்றுக்கொண்டு, தையல் நாயகி அம்மையின் பார்வையிலுள்ள சித்தாமிர்த தீர்த்தத்திற்கு சென்று அந்நீரையெடுத்துக் கொண்டு, முருகனின் சன்னதிக்கு அருகிலுள்ள ஆட்டுக் கல்லில் இட்டு, பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு அரைக்க வேண்டும்.

அது நன்கு கூழானதும் அதனை சிறு சிறு குண்டுகளாக உருட்டி உருவாக்கவேண்டும். இதனை திருச்சாந்துருண்டை என்றழைக்கின்றனர். அதனை கொண்டு சென்று அம்மனுக்கு படைத்து பூசை செய்ய வேண்டும். பூசைக்குப் பிறகு அதனை சித்தாமிர்த தீர்த்தத்துடன் உட்கொள்ள வேண்டும். இந்த திருச்சாந்துருண்டையை எடுத்துக்கொண்டால், இப்பிறவியில் பீடித்துள்ள நோய் மட்டுமின்றி, இனி எடுக்கப்போகும் 5 பிறவிகளுக்கும் எந்த நோயும் அண்டாது என்று கூறப்படுகிறது.

webdunia photoWD
சித்தாமிர்த தீர்த்தம்!

இது மட்டுமின்றி, இத்திருத்தலத்தில் காமதேனுவாக விநாயகப் பெருமான் கற்பக விருட்சத்துடன் எழுந்தருளியுள்ளார். இந்த திருத்தலத்தில் மட்டும்தான் நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒரே வரிசையில் இருப்பதை பார்க்கலாம். நவக்கிரக தோஷங்கள் அனைத்திற்கும் இத்திருத்தலத்தில் பரிகாரம் செய்து விமோசனம் பெறலாம்.
வீடியோவைப் பாருங்கள்
<< 1 | 2 | 3  >>  
புகைப்படத்தில்
பட‌த் தொகு‌ப்பு
மேலும்
கந்த்வாவில் உள்ள பவானி மாதா கோயில்!  
யோகே‌ந்‌திர ‌ஷி‌ல்நா‌த் பாபா!  
தாதாஜி தூனிவாலே  
துறவி சிங்காஜியின் கோயில!  
ஸ்ரீ ல‌ட்சு‌மி நர‌சி‌ம்மா ச‌ந்தனோ‌ட்சவ‌ம்!  
ஸ்ரீ காளத்திநாதர் திருக்கோயில்!