சின்ன தாதாஜி (சுவாமி ஹரிஹரனந்த்ஜி)
ராஜஸ்தான் மாநிலம் தித்வா கிராமத்தைச் சேர்ந்த பணக்காரரான பன்வர்லால் என்பவர் தாதாஜியை சந்திப்பதற்காக வந்தார்.
தாதாஜியை பார்த்து அவரது ஆசியைப் பெற்ற பின்னர் அவர் மீண்டும் அவரது ஊருக்குச் செல்லவேயில்லை. தாதாஜியுடனேயே இருந்துவிட்டார். முழு மனதுடன் தாதாஜிக்கு சேவையாற்றி வந்தார்.
இவர் விஷ்ணுவின் பக்தர். இயற்கையில் இவர் மிகவும் அமைதியானவர். இவரை சின்ன தாதாஜி என்றே பக்தர்கள் அழைத்தனர். தாதாஜி சமாதி அடைந்த பிறகு அவரது இடத்தில் இருந்து ஆன்மிகப் பணிகளை சின்ன தாதாஜியே செய்து வந்தார்.
இவர் 1942ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு அலஹாபாத்தில் சமாதி அடைந்தார்.
எப்படி செல்வது : கந்த்வா கிராமம் ரயில் மற்றும் சாலை வழியாகச் செல்லும் வசதி கொண்டது. கந்த்வா ரயில் அல்லது பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது. இந்தூர் விமான நிலையத்தில் இருந்து 140 கி.மீ. தூரத்தில் உள்ளது.
|