முதன்மை பக்கம் > ஆன்மிகம் > புனிதப் பயணம் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தாதாஜி தூனிவாலே  Search similar articles
-பீகா ஷர்மா
dada
webdunia photoWD
ஷீரடி சாய்பாபாவைப் போன்று மிக உன்னதமான துறவியாக வாழ்ந்தவர் தாதாஜி தூனிவாலே. ஆன்மிக நெறியுடன் வாழ்ந்த இவரை சுவாமி கேஷ்வானந்த்ஜி மஹாராஜ் என்று பக்தர்கள் அன்போடு அழைத்தனர்.

இவர் எப்போதும் அக்னி குண்டத்தின் முன்பு அமர்ந்தபடியே இறைவனை வழிபடுவார். அக்னி குண்டத்தை ஹிந்தியில் தூனி என்று சொல்லுவார்கள். தாதா என்றால் தாத்தா என்று அர்த்தம். எனவே தான் இவர் தாதா தூனிவாலே என்று அழைக்கப்பட்டார். இவர் இடைவிடாது சிவனை பிரார்த்தித்தபடி இருந்தார்.

இவரது உண்மையான வரலாறு கிடைக்கவில்லை. எனினும் இவரைப் பற்றிய பலச் செய்திகள் வழக்கத்தில் உள்ளன.

இவரது சமாதியை ஒட்டி, தாதாஜியின் நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் குரு பூர்ணிமா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த நாளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் இக்கோயிலுக்கு வந்து தாதாஜியை வணங்கிச் செல்வார்கள்.

தாதாஜியின் வழிபாட்டுத் தலங்கள் இந்தியாவில் 27 இடங்களில் உள்ளன.

agni
webdunia photoWD
இவர் வாழ்ந்த காலத்தில் அக்னி குண்டத்தில் தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருக்கும். இவர் 1930ஆம் ஆண்டில் சமாதி அடைந்தார்.

இவரது சமாதி கந்த்வா நகரத்தில் அமைந்துள்ளது. கந்த்வா ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இவரது சமாதியை அடையலாம்.
வீடியோவைப் பாருங்கள்
1 | 2  >>  
புகைப்படத்தில்
தாதா‌ஜி‌யி‌ன் கோ‌யி‌ல்
மேலும்
துறவி சிங்காஜியின் கோயில!  
ஸ்ரீ ல‌ட்சு‌மி நர‌சி‌ம்மா ச‌ந்தனோ‌ட்சவ‌ம்!  
ஸ்ரீ காளத்திநாதர் திருக்கோயில்!  
பரசுராமர் பிறந்த தலம்  
மா சந்திரிக்கா தேவி தாம்!  
பிஜாசென் மாதா கோயில்!