விகாச மாதம் மூன்றாம் நாள் அக்ஷய திருதியை அன்று சிம்மாச்சல மலையில் பக்தர்கள் குந்தனர். ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி சந்தனத்தினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார். கடவுளின் முழுமையான வடிவத்தை அன்று மட்டுமே காண முடியும்.
உலகில் உள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில்களில் சிம்மாச்சல ஷேத்ரமும் ஒன்று. சிம்மாச்சலம் என்ற சொல்லிற்கு சிங்கத்தின் மலை என்று பொருள். கடவுள் விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்மனின் மலை இது.
மலை உச்சியில் இருந்து கடலில் தூக்கி எறியப்பட்ட தனது பக்தனான பிரகலாதாவைக் காப்பதற்காக சிம்மாச்சல மலையில் கடவுள் விஷ்ணு தோன்றினார்.
தல வரலாறு!
தன்னைக் காத்த கடவுள் விஷ்ணுவிற்கு கோயில் கட்டினான் பிரகலாதா. நரசிம்மன் கைகளில் தனது தந்தையின் உயிர் போன பிறகுதான் கோயில் பணிகளை அவனால் பூர்த்திசெய்ய முடிந்தது. ஆனால், கிருதா யுகத்தின் இறுதியில் அக்கோயில் கவனிக்காமல் விடப்பட்டு சேதமடைந்தது. கோயிலுள் இருந்த கடவுளும் கவனிப்பாரின்றி மண்ணில் புதையத் துவங்கினார்.
அடுத்துவந்த யுகத்தின் துவக்கத்தில் லூனார் அரச வம்சத்தைச் சேர்ந்த புருரவா என்பவர் இக்கோயிலைக் கண்டறிந்தார். புருரவா தனது மனைவி ஊர்வசியுடன் வான்வழியாக ரதத்தில் வந்தபோது, அதிசயச் சக்தி மூலம் சிம்மாச்சல மலைக்கு இழுத்து வரப்பட்டார். அங்கு மண்ணிற்குள் புதைந்து கிடந்த கடவுளின் சிலையை அவர் கண்டார். |