உத்திரப்பிரதேசத்தில் மக்களால் பெரிதும் அறியப்படும் ஷஹ்ஜஹன்புரத்தில் அமைந்திருக்கும் பரசுராமர் பிறந்த திருத்தலத்தை இந்த வார புனிதப் பயணத்தில் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
ஜலாலாபாத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இந்த திருத்தலம். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த இடம் கேடா பரசுராமபுரி என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த இடத்தில்தான் பரசுராமர் பிறந்ததாக மக்கள் நம்புகின்றனர். இந்த இடத்தை முக்கிய சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இது பற்றி அம்மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜிதின் பிரசாத் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார்.
இந்த திருத்தலத்தை வைத்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரசியலும் நடத்தப்படுகிறது. அதாவது பரசுராமர் பெருமைக்கும், மரியாதைக்கும் உரியவராக அங்குள்ள பிராமணர்கள் கருதுகின்றனர். எனவே அப்பகுதியில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர், பரசுராமர் கோயிலுக்கு வந்து பூஜைகளும், விரதங்களும் மேற்கொள்வதன் வாயிலாக பிராமணர்களின் வாக்குகளைப் பெறும் தந்திரமும் வெகு நாட்களாக நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த கோயிலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கி சிறப்பாக நடந்து முடிந்துள்ளன.
இந்த தலத்தின் வரலாறை புரட்டிப் பார்க்கும்போது, ஜலாலுதினின் இளைய மகன் ஹபிஸ் கானிற்கு திருமணம் நிச்சயம் செய்த போது, அவருக்கு மனைவியாக வரும் மருமகளுக்கு இந்த கோயில் இருக்கும் இடம் ஜலாலுதினால் வழங்கப்பட்டுள்ளது. அப்போது இந்த கோயில் பரசுராம்புரியில் இருந்து ஜலாலாபாத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
|