இயற்கையே ஆராதிக்கும் மா சந்திரிக்கா தேவி தாம் திருத்தலம் பலராலும் அறியப்பட்ட ஓரிடம்தான். லக்னோவில் உள்ள பக்ஷி கா தலாப் (பறவைகளின் குளம்) என்ற கிராமத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
இத்திருத்தலத்தில் உள்ள வேப்ப மரத்தின் கீழ் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நவ துர்கா சிலை அமைந்துள்ளது. மஹிசாகர் சங்கமத்தின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது.
18ஆம் நூற்றாண்டின் மத்தியக் காலத்தில், ஒவ்வொரு பெளர்ணமி தினத்தன்றும் இங்கு சிறப்பான பூஜைகள் நடத்தப்பட்டது. அந்த முறை இன்றளவிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இங்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நினைத்து கோயிலில் சிவப்பு நிறத் துணியைக் கட்டிவிடுகின்றனர். அந்த வேண்டுதல் நிறைவேறியதும் கோயிலுக்கு வந்து முடிச்சை அவிழ்த்துவிட்டு, இறைவனுக்கு பிரசாதம் செய்து படைக்கின்றனர். அத்தோடு கோயில் வளாகத்தில் மணிகளையும் கட்டிவிடுகின்றனர்.
மற்றபடி, எந்தவொரு பூஜை முறையும் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது, தேங்காய் உடைப்பது உட்பட.
மா சந்திரிக்கா கோயிலில் யாவரும் சமம். இந்த கோயிலின் முழு நிர்வாகத்தையும் கவனிப்பவர் அகிலேஷ் சிங் என்பவராவார். மஹிசாகர் சங்கத்தின் முக்கிய பூசாரி ஒரு ஐயர். இங்கு வரும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பைரவரை வழிபடுகின்றனர். பலதரப்பட்ட சமுதாயங்களை ஒன்று சேர்க்கும் ஒரு அமைப்பாகவே இந்த கோயில் விளங்குகிறது.
இக்கோயிலில் கந்தபுராணத்தில் வரும் கடோட்கஜனின் மகன் பார்பரிக்கிற்கும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சந்திரிகா தேவி தாம் கோயிலின் வடமேற்கு மற்றும் தென் பகுதிகளை கோமதி ஆறு சூழ்ந்துள்ளது. அதேபோல் மஹிசாகர் சங்கம் கிழக்குப் பக்கத்தில் கோயிலை சூழ்ந்துள்ளது. ஆனால் இதுவரை தண்ணீரால் இப்பகுதிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டதில்லை. மேலும், இப்பகுதியுடன் அதள பாதாளம் நேரடியாக தொடர்புடையது என்றும் நம்பப்படுகிறது.
|