அதுவரை ஒவ்வொரு இரவும் ஒளி உமிழிந்து மிளிர்ந்து கொண்டிருந்த சந்திரனின் வடிவம் தேய ஆரம்பித்தது. அது முழுமையாகத் தேய்வதற்குள் கடவுள்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து சாபத்தை திரும்பப் பெறுமாறு தக்ஷ்னை வேண்டினர். சோமனை சரஸ்வதி நதி கடலில் கலக்கும் இடத்திற்குச் சென்று நீராடி சாப விமோசனம் பெருமாறு தக்ஷ்ன் கட்டளை இட்டான். அந்த கட்டளைக்கு இணங்க நீராடி சிவபெருமானை வழிபட்ட இடமே சோமநாதர் ஆலயமானது.
எனவே இங்கு சந்திரனுக்கு அருளிய சிவபெருமான் சோமனா என்ற நாமத்துடன் அழைக்கப்படுகின்றார்.
அங்கு செல்வது எப்படி
சாலை மார்கமாக
மும்பையில் இருந்து சோம்நாத்திற்கு விமானம் மூலம் கேஷோட் என்ற இடத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து சோமநாதர் ஆலயம் 55 கி.மீ. தூரத்தில் உள்ளது.
பேருந்து, வாடகைக் கார் சேவைகளும் உள்ளன.
ரயில் மார்கமாக
அகமதாபாத் செல்லும் ரயில் பாதையில் உள்ள வேராவால் என்ற ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சோமநாதர் கோயில் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது.
சாலை மார்கமாக
அகமதாபாத்திலிருந்து 400 கி.மீ. தூரத்திலும் போர்பந்தரில் இருந்து 128 கி.மீ. தூரத்திலும், மும்பையில் இருந்து 889 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
தங்கும் வசதி
புகழ்பெற்ற தங்கும் விடுதிகளின் கிளைகள் சோம்நாத்தில் உள்ளன. ஏராளமான விருந்தினர் மாளிகைகளும் உள்ளன.
|