ஸ்ரீ ஹர்மந்தீர் சாகிப் அல்லது தர்பார் சாகிப் என்று அழைக்கப்படும் பொற்கோயில் உலகில் உள்ள சிக்கியர்களின் புனித தளமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு ஹரி என்ற பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சிக்கியர்கள் நாள்தோறும் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ ஹர்மந்தீர் சாகிப்பிற்கு வந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
சீக்கியர்களின் 5வது மத குருவான குரு அர்ஜன் சாகிப் சக்கியர்களுக்கு என்று ஒரு பொதுவான வழிபாட்டு த் தலம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதனை தொடர்ந்து அவருர் வடிவமைத்த கட்டடக்கலை வண்ணத்தில் ஸ்ரீஹர்மந்தீர் சாகிப்பை நிர்மாணிக்க திட்டமிட்டார்.
அமிர்தசரஸ்சில் உள்ள அந்த தெப்பகுளத்தை அமைக்க சீக்கியர்களின் 3வது மத குருவான குரு அமர்தாஸ் சாகிப் திட்டமிட்டார். ஆனால், அந்த தெப்பகுளம் சீக்கியர்களின் 4வது மத குருவான குரு ராம்தாஸ் சாகிப் காலத்தில் பாபா புத்தாஜி மேற்பார்வையில் கட்டிமுடிக்கப்பட்டது.
இந்த கோயிலை அமைப்பதற்கான நிலங்கள் முந்தைய சீக்கிய மத குருக்களிடம் நன்கொடையாக, அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நிலசுவான்தார்கள் கொடுத்த பணத்தில் இருந்து வாங்கப்பட்டது. குருராம்தாஸ் சாகிப் தெப்பக்குளத்துடன் (சரோவர்) ஒரு குடியிருப்பு பகுதியையும் அமைக்க திட்டமிட்டார். இதனைத் தொடர்ந்து 1570ஆம் ஆண்டு 2 கட்டடங்களையும் கட்டும் பணிகள் துவங்கின. 1577ஆம் இப்பணிகள் முடிவடைந்தன.
இந்த கோயில் அமைப்பதற்கான அஸ்திவாரம் அமைக்கும் பணியை 1588ஆம் ஆண்டு லாகூரில் வசித்து வந்த இஸ்லாமிய மார்கத்தை சேர்ந்த அறிஞர் ஹசரத்- மியான் - மிர்- ஜி தொடங்கி வைத்தார். இவர் குரு ஹர்ஜன்சாகிப்புக்கு உற்ற நண்பராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டுமான பணிகள் குருஹர்ஜன் சாகிப்பின் நேரடி மேற்பார்வையிலேயே நடைபெற்றது. இப்பணியில் அவருக்கு சீக்கிய முன்னோடிகளான பாபா புத்தாஜி, பாய் குருதாஸ் ஜி, பாய் ஷாலோஜி மற்றும் பல சீக்கிய பக்தர்கள் ஈடுபட்டனர்.
இந்து கோயில்களை அமைக்கும் போது வானளாவ உயர்ந்த கோபுரங்களை கொண்டு அமைப்பது இந்து கோயில் கட்டடக் கலையின் சிறப்பு அம்சமாக விளங்கியது. ஆனால், குருஹர்ஜன் சாகிப் இந்து கோயில்களை போல அல்லாது குறைந்த உயரத்திலேயே கோயிலை நிர்மாணித்தார். இக்கோயிலுக்கு உள்ளே வரவும், வெளியே செல்லவும் ஒரே பாதையை பயன்படுத்தும் வகையில் 4 வாயில்கள் நான்கு புறமும் அமைக்கப்பட்டுள்ள. இந்த 4 வாயில்களும் ஜாதி, இனம், பாலினம் மற்றும் சமய வேறுபாடு இன்றி யார் வேண்டுமானாலும் வந்து செல்லலாம் என்பதை எடுத்துக் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
கட்டடத்தை கோயிலாக மாற்றும் பணி 1661ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து குரு ஹர்ஜன் சாகிப் குரு கிராந்த் சாகிப்பை அங்கு நிறுவினார். மேலும் பாபா புத்தாஜியை முதல் கிராந்தியாக அதாவது சீக்கியர்களின் புனித நூலை வாசிப்பவராக நியமனம் செய்தார். ஆத் ஷாத் திராத் என்று அழைக்கப்படும் பொற்கோயில் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களின் திருத்தலமாக விளங்கி வருகிறது.
|