லக்னோவில் உள்ள பாடுக் பைரவ் கோயிலில் கடந்த ஞாயிறன்று பதாவ் என்ற சிறப்பு விழா நடைபெற்றது. இசை இரவான அன்று பலரும் இங்கு வந்து தங்களது இசைப் பயிற்சிகளை துவக்கினர்.
லக்னோவின் கனசர்பக் என்ற இடத்தில் அமைந்துள்ளது பாடுக் பைரவ் கோயில். பாடுக் பைரவ் இசையின் மன்னர் என்று இந்த மக்களால் நம்பப்படுகிறார்.
தங்களது பிரார்த்தனைகளை வேண்டிக் கொள்ளவும், இசைப் பயிற்சியை துவக்கவும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகின்றனர்.
முந்யை காலத்தில் இப்பகுதி கதக் கரனா என்று அழைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பைதவ் என்ற சிறப்பான விழா இங்கு கொண்டாடப்பட்டுள்ளது. அன்றைய தினம் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த கோயிலுக்கு வந்து தங்களது இசைப் பயிற்சியைத் துவக்குவதுதான் இந்த விழாவின் சிறப்பு.
மேலும், கடவுள் படுக் பைரவருக்கு நிவேதனமாக சோமபானம் என்று அழைக்கப்படும் மதுவையே பக்தர்கள் படைக்கின்றனர்.
|