ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று 2 முதல் 3 லட்சம் பக்தர்கள் 14 கி.மீ. நீளமுடைய மலைப்பாதையைச் சுற்றி கிரிவலம் வருகின்றனர். கார்த்திகை தீபத்தன்று 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் திரண்டு இந்த புனித மலையின் உச்சியில் ஏற்றப்படும் தீபத்தைக் கண்டு தரிசித்து வணங்கிச் செல்கின்றனர்.
இந்த புனித திருத்தலத்தில்தான் இந்துக்களின் மிக முக்கியமான மகா சிவராத்திரி பண்டிகை உருவானது.
இப்படி புகழ்பெற்ற புனிதத் தலமாக விளங்குவதுதான் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் என்றும், திரு அண்ணாமலையார் என்றும் அழைக்கப்படும் 2,665 அடி உயரமுற்ற சிவபெருமானின் உருவமாக தரிசிக்கப்படும் திருவண்ணாமலை ஆகும்.
வெப்துனியாவின் புனிதப் பயணத்தில் மிகப் பழமைவாய்ந்த இந்த புனித மலைக்கும், புனிதமான திருவண்ணாமலை நகருக்கும் உங்களை அழைத்துச் செல்கின்றோம்.
நினைத்த மாத்திரத்திலேயே முக்தி அளிக்கக்கூடிய திருத்தலம் இது. சிவபெருமானின் பஞ்சபூத திருத்தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. இது சிவனின் அக்னித் தலமாகும். காஞ்சி, திருவாரூர் (புவித் தலம்), சிதம்பரம் (ஆகாயம்), ஸ்ரீ காளஹஸ்தி (வாயுத் தலம்), திருவாணைக்கால் (நீர்த் தலம்) ஆகும்.
மகா சிவராத்திரி!
படைப்புக் கடவுளான பிரம்மனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கும் தனது பேருண்மையை உணர்த்த சிவபெருமான் அக்னி வடிவமாய் எழுந்தருளிய திருத்தலம் என்று சிவபுராணத்தில் திருவண்ணாமலை கூறப்பட்டுள்ளது.
|