|
திருவாரூர் புகழ்பெற்ற ஸ்ரீ கமலா வசந்த தியாகேசர் கோயில் திருத்தேரோட்டம் இன்று காலை திட்டமிட்டபடி துவங்கியது. தமிழ்நாட்டின் மிகப் பெரிய தேரான திருவாரூர் தேரை வடம்பிடித்து இழுக்க சுற்று வட்டாரங்களில் இருந்த இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். அரசு நிர்வாகத்தினரும், ஆன்மிகப் பிரமுகர்களும் வடம் பிடித்த தேரிழுத்தனர்.இன்று காலை சரியாக 8 மணிக்கு ஆழித் தேரோட்டம் துவங்கியது. திருவாரூர் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் திணறிக் கொண்டிருக்க, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மின் தடையும் ஏற்பட்டுள்ளது.திருவாரூர் ஆழித் தேரோட்டத்தின் காண்பொளித் தொகுப்பை விரைவில் தமிழ்.வெப்துனியா.காமில் காணலாம்.ஆழித் தேரோட்டத்தின் புகைப்படத் தொகுப்பு
|