காஞ்சிபுரத்தை அடுத்த கூழமந்தல் கங்கை கொண்ட சோழீசுரர் கோயிலில் 1000 ஆண்டுகளுக்கு பிறகு மகா சிவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.
உத்தர கங்கை கொண்ட சோழபுரம் எனவும் அழைக்கப்படும் கூழமந்தலில் உள்ள கோயிலை முதலாம் ராஜேந்திர சோழ மன்னன் கட்டியுள்ளார். முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் தெப்பக்குளத்தில் மிதப்பது போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. இதுவரை இத்தலத்தில் மகா சிவராத்திரி நடைபெறவில்லை.
இந்நிலையில் கூழமந்தல் இளைஞர்கள் சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். சிவராத்திரியை முன்னிட்டு 6-ம் தேதி காலை 6, 10, மாலை 3, 6, இரவு 10, 12 மணி என 6 கால பூஜைகள் நடக்கின்றன. 7 மணிக்கு கங்கை கொண்ட சோழிச்சூரர் ரிஷப வாகனத்தில் திருவீதி உலாவும், அன்னதானமும் நடக்கிறது. இதை கோயில் விழாக் குழுச் செயலர் மு.காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
|