திருச்சியில், திருமல- திருப்பதி தேவஸ்தானத்தின் தர்ம பிரச்சார பரிஷத், திருச்சி ஸ்ரீ ரங்கா சேவா ஸ்தாபனமும் இணைந்து வருகிற மார்ச் 16ஆம் தேதி ஸ்ரீனிவாசா திருக்கல்யாண உத்சவத்தை நடத்த உள்ளது.
ஸ்ரீ ரங்கா சேவா ஸ்தாபனத்தின் தலைவர் வி.பத்ரி நாராயணன், செயலாளர் பாலாஜி ஆகியோர் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த திருக்கல்யாண உத்சவத்தில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கடவுளின் அருளைபெற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக கூறினர்.
மேலும் திருச்சியில் நடைபெற உள்ள உத்சவத்தில் திருமல- திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் கருணாகர ரெட்டி உள்பட 140 உறுப்பினர்கக்ள கொண்ட குழுவினர்கள் வந்து கலந்து கொண்டு உத்சவத்தினை நடத்தி வைக்கின்றனர் என்று ஸ்ரீ ரங்கா சேவா உறுப்பினர் பி.கே. தியாகராஜன் கூறியுள்ளார்.
|