முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > இஸ்லாம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
குர்ஆனைக் கற்க வேண்டுமென்ற கட்டளைகள்
அபூஹுரைரா(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அப்துல்லாஹ் இப்னுஸ்ஸலாம்(ரலி) முதலியவர்கள் உப்ய்யுப்னுகஃப்(ரலி) கிராஅத்தைக் கற்றுக் கொண்டார். இவர்களிடமிருந்து தாபியீன்களில் பெரும் பகுதியினர் கற்றுக் கொண்டனர்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ஸாலிம்(ரலி), முஆது இப்னுஜபல்(ரலி), உபய்யு ஃபு(ரலி) ஆகிய நால்வரிடமிருந்து திருக்குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று திருநபி(ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னில் ஆஸ் (ரலி)
நூல் : புகாரீ


இந்நால்வரில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) ஸாலிம்(ரலி) ஆகிய இருவரும் முஹாஜிர்கள், முஆதுப்னு ஜபல்(ரலி) உபய்யுப்னுகஃப்(ரலி) ஆகிய இருவரும் அன்ஸார்கள். ஸாலிம் என்பவர் அபூ ஹுதைபா என்பவரிடம் அடிமையாக இருந்து விடுதலை பெற்றவர். இப்னு மஃகல் என்றும் ஸாலிமுக்கு மற்றொரு பெயருண்டு. திருநபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூபக்கர் ஸித்தீக்(ரலி) அவர்களின் கிலாபத் ஆட்சிக் காலத்தில் கலகக்காரர்கள் நிகழ்த்திய யுத்தத்தின் போது யமாமாவில் நடைபெற்ற போரில் மேற்கண்ட அபூஹுதஃபாவின் அடிமையான ஸாலிமுப்னு மஃகல் (ரலி) மரணமடைந்தார்கள். உமர் பாறூக் (ரலி) அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஆதுப்னு ஜபல் (ரலி) ஹாம் பகுதியில் வாந்தி பேதியால் மரணமடைந்தார்கள். அப்துல்லாஹப்னு மஸ்ஊத்(ரலி) உபய்யுப்னு கஃபு(ரலி) ஆகிய இருவரும் உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மரணமடைந்தார்கள். காத்திபுல் வஹ்யில் ஒருவரான ஜைதுப்னுதாபித் (ரலி) அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தார்கள். தஜ்வீதுச் சட்டப்படி திருக்குர்ஆன் ஓதும் கிராஅத்துக் கலைக்கு இவரே தலைவராவார்.

திரு‌க்கு‌ர்ஆனை‌த் தவ‌றி‌ன்‌றி ஓது‌ங்க‌ள், த‌ஜ்‌வீது தா‌ன் ‌கிராஅ‌த்து‌க்கு ஆபரண‌ம் எ‌ன்று இ‌‌ப்னு ம‌ஸ்ஊ‌த்(ர‌லி) கூ‌றியு‌ள்ளா‌ர்க‌ள் எ‌ன்று அ‌த்தா‌யி(ர‌‌ஹ‌்) முத‌லியோ‌ர் அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

அ‌றி‌வி‌ப்பவ‌ர் : இ‌ப்னு ம‌ஸ்ஊ‌த் (ர‌லி)

<< 1 | 2 
மேலும்
பொ‌ய்மையை களைவோ‌ம்: முத‌ல்வ‌ர் ‌மீலாது ந‌பி வா‌ழ்‌த்து!
இ‌ஸ்லா‌‌ம் மாத‌த்‌தி‌ன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ம்!
ப‌க்‌ரி‌த் : இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள்‌!  
ஹஜ் பயணம் செ‌‌ல்பவ‌ர்களு‌க்கு பு‌த்த‌றிவு பயிற்சி!
இறையருளிய ர‌ம்ஜா‌ன் பண்டிகை!
ரம்ஜான் பண்டிகைக்கான சிறப்பு உணவுகள்