டாரட் | இந்து | கிறித்துவம் | இஸ்லாம் | மற்றவை | பஞ்சாங்கம் | பண்டிகைகள் | கட்டுரைகள் | செய்திகள் | தலங்கள் | அருளுரை | பொ‌ன்மொ‌ழிக‌ள்
முதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஆன்மிகம் » இந்து » ஏழுமலையானுக்கு ரூ.32 ஆயிரம் கோடி நகை
 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடவுளு‌க்கஅ‌ணி‌வி‌க்க‌ப்படுவத‌ற்காக ப‌க்த‌ர்க‌ள் கா‌ணி‌க்கையாக அ‌ளி‌த்த நகைகளின் மதிப்பு ரூ.32 ஆயிரம் கோடி இருக்கும் என்று தேவஸ்தான அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருக்கும் மொத்த நகைகள் விவரங்கள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவிக்க வேண்டும் என்று கோ‌ரி ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்னும் 3 வாரத்திற்குள் திருப்பதி தேவஸ்தானத்தில் இருக்கும் தங்க நகைகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஏழுமலையானை தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோயில் உண்டியலில் காணிக்கையாக பணம், வெள்ளி, தங்கம் ஆகியவற்றை செலுத்துகின்றனர்.

மேலும் ஒரு சிலர் தங்கத்தால் செய்யப்பட்ட, வைர கற்கள் பதிந்த ஆபரணங்களை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இவ்வாறு பக்தர்கள் காணிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செலுத்தியுள்ள தங்க, வைர நகைகள் மொத்த மதிப்பு ரூ.32 ஆயிரம் கோடி இருக்கும் என்று தேவஸ்தான அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இன்னும் 3 வாரத்திற்குள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும்போது ஏழுமலையான் கோயிலில் இரு‌க்கு‌ம் மொ‌த்த நகைக‌ளி‌ன் உ‌ண்மையான முழு ‌விவர‌ம் தெ‌ரிய வரு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், ஏழுமலையானு‌க்கு அ‌ணி‌வி‌க்க ப‌க்த‌ர்க‌ள் அ‌ளி‌க்கு‌ம் நகைக‌ள் அ‌திக எடை கொ‌ண்டதாக இரு‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று அ‌ர்‌ச்சக‌ர்க‌ள் கரு‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். தொட‌ர்‌ந்து எடை அ‌திகமான நகைகளை இறைவனு‌க்கு அ‌ணி‌வி‌க்க‌ப்படுவதா‌ல் ‌திருவுருவ‌ச் ‌சிலை‌க்கு ஏதேனு‌ம் சேதார‌ம் ஆ‌கி‌விடு‌ம் எ‌ன்ற அ‌ச்ச‌த்‌திலேயே அவ‌ர்க‌ள் இ‌ந்த தகவலை அ‌றி‌‌வி‌த்தன‌ர்.

ச‌மீப‌த்‌தி‌ல் ஆ‌ந்‌திர அமை‌ச்ச‌ர் ஒருவ‌ர் அ‌ளி‌த்த வைர ‌கி‌ரீட‌த்தை 3‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பூசா‌ரிக‌ள் தூ‌க்‌கி வ‌ந்து அதனை ஏழுமலையானு‌க்கு அ‌ணி‌வி‌த்து ‌விடு‌கி‌ன்றன‌ர். இதுபோ‌ன்ற எடை கூடுதலாக ‌கி‌ரீட‌ங்களை நா‌ள்தோறு‌ம் தா‌ங்‌கி‌நி‌ற்கு‌ம் ஏழுமலையா‌ன் ‌சிலை‌க்கு ஆப‌த்து ஏ‌ற்படு‌ம் எ‌ன்று அ‌ச்ச‌ப்படுவ‌தி‌ல் உ‌ண்மை இரு‌க்க‌த்தானே செ‌ய்‌கிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்