ஒரிசா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதர் கோயிலில் ரத யாத்திரை இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில் தேர் பவனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருளாசியைப் பெறுவார்கள்.
இதற்கான ஏற்பாடுகள் பல நாட்களுக்கு முன்பே துவங்கி சிறப்பாக நடந்து வருகிறது. அந்த கோயிலின் அமைப்பு மற்றும் தேர் பவனியின் வரலாறும் என்ன வென்று ஆராய்ந்தோம்.
அதன்படி ஒரிசா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதர் கோயிலின் ரத யாத்திரை கடந்த 2,000 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து வருகிறது.
ஸ்ரீஜகந்நாதர் அவருடைய சகோதரர் ஸ்ரீபலராமர் மற்றும் சகோதரி சுபத்ரா தேவியாருடன் பவனி வந்து மக்களுக்கு அருளாசி வழங்குவது தொன்று தொட்டு நடந்து வரும் கோலாகலமான விழாவாகும்.
ஒரிசா மாநிலத்தின் தலைநகருக்கு அருகே உள்ள பூரி நகரமே ஸ்ரீ §க்ஷத்ரா என்றழைக்கப்படுகிறது. சங்கு போன்ற வடிவில் உள்ள இந்நகரத்தின் மையப்பகுதியில் ராமகிருஷ்ணபுரம் என்ற நகரை அமைத்து விஷ்ணுபக்தரான அரசர் இந்திரத்யும்னன் ஸ்ரீ ஜகந்நாதருக்கு கோயிலை கட்டினார்.
கோயிலின் உச்சியில் கலசமும் அதன் மேல் சக்கரமும் அமைக்கப்பெற்றது. கோயிலை தங்க ஆபரணங்களால் அலங்கரித்தார்.
இந்த கோயிலின் முக்தி மண்டபத்தில் இருக்கும் நரசிம்மரின் மூர்த்தி பிரம்மாவால் யாகம் செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
அந்த கோயிலில் இருக்கும் சாமி சிலைகள் முழு உருவம் அடையாமல் இருக்கும். அதற்கு ஒரு வரலாறு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, கடலில் மிதந்து வந்த மரத்திம்மையில் நான் பரிபூரணமாய் இருக்கிறேன் என்று ஸ்ரீ ஜகந்நாதர் இந்திரத்யும்னனிடம் கனவில் கூறினார்.
|