சென்னைத் தீவுத்திடலில் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் மிகச் சிறப்பாக நேற்று நடந்து முடிந்தது.
இந்த திருக்கல்யாண மஹோத்சவத்தில் சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொண்டு இறைவனை தரிசித்தனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக சென்னை தீவுத்திடலில் திருப்பதி கோயில் போல அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
நேற்று மாலை 6 மணியளவில் அரங்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. திருமண வைபவத்திற்கான சடங்குகள் நடந்து முடிந்து இரவு 7.50 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாண காட்சியை அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் கண்டனர்.
அதன்பிறகு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
|