பிரதோஷத்தன்று கோயிலை வலம் வரும் முறை
நாள்தோறும் சிவாலயம் சென்று சுவாமி சன்னதியை மூன்று முறை வலம் வருவதற்குப் பதிலாக பிரதோஷ நாட்களில் பிரதோஷ முறையில் வலம் வருவது மிகுந்தப் பலனைத் தரும்.
பாற்கடலைக் கடையும்போது வாசுகி நாகத்திடமிருந்து வெளிப்பட்ட ஆலகால விஷம் தேவர்களைத் துரத்தியது. அவ்விஷம் தேவர்களை முன்னும் பின்னும், வலமும் இடமுமாகத் துரத்தியது. அவர்கள் சிவலோகத்தின் வலமாக வந்து பரமனைச் சரணடையலாம் என்று எண்ணி ஓடினார்கள். ஆனால் விஷமானது அப்பிரதட்சணமாகச் சென்று எதிர்த்தது.
இதைக் கண்டு பயந்த தேவர்கள் வந்த வழியிலேயே திரும்பி ஓடினார்கள். ஆலகால விஷமும் வந்த வழியே திரும்பி அவர்களை எதிர்த்தது. இவ்வாறு தேவர்கள் வலமும் இடமுமாக பரமனைச் சுற்றி வந்த நிகழ்வே சோம சூக்தப் பிரதட்சணம் என்று அழைக்கப்படலாயிற்று.
|