வரும் ஏப்ரல் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விரோதி ஆண்டு பிறக்கிறது.
சூரியன் மேஷ ராசிக்கு வந்து உச்சம் பெறுகிறார். புதிதாய் பிறக்கும் இந்த தமிழ் ஆண்டை கொண்டாடப் பல வழிகள் உள்ளன. இந்த தினத்தில், அறுசுவைகளும் கலந்து ஒரு பச்சடி செய்து வீட்டில் விருந்து படைத்து உண்ணலாம்.
குடும்பத்தோடு கோயிலுக்குச் செல்வது, குடும்பத்து பெரியவர்களின் ஆசி பெறச் செல்வது, பொழுது போக்கு விஷயங்களுக்குச் செல்வது என இந்த புத்தாண்டு பிறப்பை இனிமையாகக் கழிப்பார்கள்.
இந்த ஆண்டின் பெயர் விரோதி ஆண்டு என்றாலும், இந்த ஆண்டில் யாரும், யாருக்கும் விரோதியாகாமல், விரோதம் பாராட்டாமல் இருக்க வேண்டும் என்று வணங்கி இந்த நன்னாளை வழிபடுவோம்.
இந்த ஆண்டு சுய நல கொள்கைகளை விட்டுவிட்டு, பொது நல நோக்கத்தோடு செயல்படுவோம்.
|