ஸ்ரீபெரும்பதூர் அருகே உள்ள வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற உள்ளன.
வரும் 31ஆம் தேதி கோயிலில் உள்ள எல்லா சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட உள்ளது.
இரவு 11 மணிக்கு கிராமிய கை சிலம்பு பாடல் இசை நிகழ்ச்சி நடக்கிறது. புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12.01 மணிக்கு முருகன் சுவாமிக்கு முத்தங்கி அலங்கார காட்சி தரிசனம் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து 1ம் தேதி காலை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
|