கார்த்திகை மாதம் பிறந்தவுடன் தென்மாநிலங்களில் இருந்து பல லட்சக்கணக்கனோர் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் கடைபிடிக்கின்றனர்.
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை தொடங்கப்படுகிறது.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் மேற்கொள்வர்.
இதனால் இம்மாதம் ஸ்ரீ ஐயப்பனுக்கு உரிய மாதமாகவும், ஐயப்ப பக்தர்களுக்கு உரிய மாதமாகவும் கருதப்படுகிறது.
|