முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > கட்டுரைகள்
 
ச‌னீ‌ஸ்வர‌‌ர், எள், நல்லெண்ணெய்!
கலிய. இரவிச்சந்திரன்
Webdunia
மா‌‌றி வரு‌கி‌ன்ற பழக்க வழக்கம், பண்பாட்டுச்‌ ‌சீ‌ர்கேட்டா‌ல் ம‌னித‌‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல இ‌ந்த ‌பிரப‌ஞ்சமு‌ம் (இயற்கை) இழ‌ந்து வருவது ஏராள‌ம் எ‌ன்பதை நா‌ம் உணராமல் இரு‌ப்பது வேதனை‌க்கு‌ரியது. பு‌தியனவெ‌ல்லா‌ம் ந‌‌‌ன்மை பய‌க்குமேயானா‌ல் ஏ‌ற்புடையது தா‌ன், ஆனா‌ல் பழைய ப‌ண்பாடுகளை ஆராயாம‌ல் புறந்தள்ளிவிடுவது விவேக‌மாகாது.

webdunia photoFILE
ப‌‌ண்டைய ப‌ண்பாடுக‌ளி‌ல் உணவு உ‌ள்பட அனை‌த்‌திலு‌ம் ஒரு காரண‌ம், ந‌‌ன்மை இ‌ல்லாம‌ல் இ‌ல்லை. உதார‌ணம் எ‌‌ள்ளிலிருந்து பெறப்படும் ந‌ல்ல எ‌‌‌ண்ணெ‌ய் இ‌ன்று வழ‌க்க‌த்‌தி‌லிரு‌ந்து ‌மறைந்துவிடும் ‌நிலை‌யி‌ல் உள்ளது.

எ‌ண்ணெ‌ய் வகைக‌ளி‌ல் த‌னி‌ச்‌சிற‌ப்பு வா‌ய்‌ந்தது நல்லெண்ணெய். இது ம‌ற்ற எ‌ண்ணெ‌ய்க‌ள் போ‌ல் இர‌த்த‌த்‌தி‌ல் கொழு‌ப்பு சேர ‌விடுவ‌தி‌‌ல்லை, மாறாக கொழு‌ப்பை அக‌ற்‌றி இர‌த்த‌த்தை சு‌த்‌திக‌ரி‌க்கக் கூடியது. மு‌‌ன்பெ‌ல்லா‌ம் இ‌ந்த எ‌ண்ணெ‌ய் ம‌ட்டுமே உண‌வி‌ல் சே‌‌ர்‌த்து கொ‌ள்ள‌ப்ப‌ட்டது. இ‌ன்று மா‌‌ற்று எ‌‌ண்ணெ‌ய்களே அ‌திக‌ம் புழ‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ளது. ‌கிராம‌ப் புற‌ங்க‌ளி‌ல் பா‌ல் சுர‌க்கு‌ம் பசு‌க்களு‌க்கு எ‌ள் பிண்ணா‌க்கு ‌‌சி‌ரிதளவும் அ‌த்துட‌ன் தே‌ங்கா‌ய், கடலை பு‌ண்ணா‌க்கு‌ம் சே‌‌‌ர்‌த்து கொடு‌ப்பா‌‌ர்க‌ள. ,அ‌திக‌ம் எ‌ள் பு‌ண்ணா‌க்கு கொடு‌த்தா‌ல் மா‌ட்டி‌ன் இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள கொழு‌ப்பை ‌தி‌ரி‌த்து பா‌ல் வ‌ழியே கொ‌ண்டு வ‌ந்து ‌விடு‌ம். பா‌ல் கொழு‌‌ப்பு ‌‌நிறை‌ந்து தரமானதாக இரு‌க்கு‌ம், ஆனா‌ல் மாடு இளை‌த்து‌விடு‌ம். இதனா‌ல் எ‌ள் பு‌ண்ணா‌க்கு அ‌திக‌ம் கொடு‌க்க மா‌ட்டா‌‌‌ர்க‌ள்.

பூ‌ப்பெ‌ய்து‌ம் இள‌ம் பெ‌ண்களு‌க்கு சு‌த்தமான ந‌ல்ல எ‌ண்ணெ‌ய் குடி‌ப்பத‌ற்கு கொடு‌ப்பா‌‌ர்க‌ள். ஏனெ‌ன்றா‌ல் இது (மூல) அ‌ண்ட அணு உ‌ற்ப‌த்‌தி உறு‌ப்புகளை ‌சீராக செய‌ல்பட வை‌க்கு‌ம், கரு‌ப்பை‌யி‌ல் அழு‌‌‌க்கை அக‌ற்று‌ம் த‌ன்மை வா‌ய்‌ந்தது. ந‌ல்ல எ‌ண்ணெ‌ய் கு‌ளிய‌ல் மூல சூ‌ட்டை த‌ணி‌க்கு‌ம், உட‌லி‌ல் படியு‌ம் எ‌ண்ணெ‌ய் பசையை அக‌ற்‌றி ம‌யி‌‌ர் க‌ண்களை சு‌த்த‌மாக வை‌த்‌திரு‌க்கு‌ம். இதனா‌ல் ‌வியர்வை வெ‌ளியே‌ற்ற‌ம் ‌சீராக இரு‌க்கு‌ம்.

கோயி‌ல்க‌ளி‌‌ல் ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌தீப‌ம் ஏ‌ற்று‌ம் வ‌ழக்கமு‌ம் ஒரு ‌சிற‌ப்பு அ‌ம்சமேயாகு‌ம். ‌தீப‌ம் எ‌ரி‌ந்த எ‌ண்ணெ‌ய் பசை (ஆ‌வி நிலையில்) கருவரை‌யி‌ன் சுவ‌ர்க‌ளி‌ல் உ‌ள்ள க‌ல்‌லி‌ன் ‌மீது படியு‌ம், அ‌த்துட‌ன் க‌ற்பூர‌ம் எ‌ரி‌ந்த சுட‌ர் படி‌ந்து கொ‌ள்ளு‌ம். இவை க‌ல்‌லி‌ன் குண‌த்துட‌ன் சே‌ர்‌ந்து இறைவனை வ‌ழிபட கருவறை‌க்கு‌ள் செ‌ல்லு‌ம் அனைவரு‌க்கு‌ம் இது ஆரோ‌க்‌கிய‌த்தை அளி‌க்க வ‌ல்லதாகும்.
  1 | 2 | 3  >> 
மேலும்
வரம் ஆன்மீக வெளியீடு : பிரதோஷம்... சகல தகவல்களுடன்
எலுமிச்சை ஜீவ கனி : அதனால்தான் பலியிடுகிறோம்!
ராமர் பாலம் : அரசியலில் மாற்றம் நிகழும் - கணிப்பு!
இந்தியா - சீனா உறவு : வெற்றி இந்தியாவிற்கு அல்ல - ஜோதிடர்!
வரம் ஆன்மீக வெளியீடு : பிரதோஷம்... சகல தகவல்களுடன்
புரட்டாசி வெயிலில் புல் பூண்டும் கருகும்!