சில விளங்க முடியாத விஷயங்களையும், விநோத முறைகளையும் நமது மக்கள் பின்பற்றி வருகின்றனர். அதிலும் கடவுளின் அருளைப் பெற சில விபரீத பிரார்த்தனைகளையும் மக்கள் செய்கின்றனர்.அப்படியிருக்க தீர்க்க முடியாத சில வியாதிகளுக்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் சிகிச்சை முறைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.இந்த வாரம் நம்பினால் நம்புங்கள் பகுதியில் மஞ்சள் காமாலையைப் போக்குவதற்காக இருக்கும் ஒரு சிகிச்சை முறையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.ஓரிடத்தில், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக பெரிய வரிசையில் காத்து இருப்பதைக் கண்டோம். இந்த காட்சி ஏதாவது ஒரு மருத்துவமனையில் கண்டது அல்ல, மஞ்ஜித் பால் சலுஜா என்பவரது கடையின் வாசலில் கண்ட காட்சிதான். இவரது விநோத சிகிச்சை முறையால் மஞ்சள் காமாலை குணமடைவதாகக் கூறப்படுகிறது.இந்த சிகிச்சை முறையில், மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டவரது காதில் முக்கோண வடிவ காகிதத்தை வைக்கிறார். காகிதத்தின் ஒரு முனையை மெழுகுவர்த்தி மூலமாக பற்ற வைக்கிறார். அந்த காகிதம் எரிந்து கொண்டிருக்கும் போது அவர் தொடர்ந்து குருபானி ஓதிக் கொண்டிருக்கிறார். அந்த காகிதம் எரிந்து காதில் இருந்து விழும்போது, காதின் ஓரத்தில் மஞ்சள் திரவம் இருப்பதை காண முடிகிறது. இந்த சிகிச்சையின் மூலம் உடலில் இருக்கும் மஞ்சள் காமாலை காதின் வழியாக வெளியேறிவிடுவதாக மஞ்ஜீத் கூறுகிறார்.மஞ்ஜீத் சர்தார்ஜி இனத்தைச் சேர்ந்தவர் என்றாலும், ஒவ்வொரு முறையும் சிகிச்சையைத் தொடங்கும்போது விநாயகரை வழிபட மறப்பதில்லை.
|