முதன்மை பக்கம் > ஆன்மிகம் > நம்பினால் நம்புங்கள் > கட்டுரை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆவிகளை துரத்தும் மகா ஆரத்தி பூஜை!
webdunia photoWD
அதில் கலந்துகொண்ட பெண்களின் நடத்தை வித்தியாசமாக இருந்தது. சிலர் கத்திக்கொண்டும், மேலும் சிலர் தரையில் உருள்வதுமாக இருந்தனர். அவர்கள் உடலில் புகுந்துள்ள ஆவியே இவ்வாறு அவர்களை ஆட்டுவிக்கிறது என்று அங்கிருந்தவர்கள் கூறினர்.

இந்த பூஜையில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த ஜித்தேந்திரா பட்டேல் என்பவரிடம் பேசினோம். தனது மனைவியின் உடலிற்குள் அடிக்கடி ஒரு ஆவி வந்து செல்வதாகக் கூறினார். அப்பொழுதெல்லாம் அவரது மனைவி மெளனமாகவும், எதையும் சாப்பிடாமலும் இருப்பார் என்று கூறிய ஜித்தேந்திரா, இந்தக் கோயிலில் நடைபெறும் ஆரத்தியில் கலந்துகொள்ளத் துவங்கியதிலிருந்து சற்று முன்னேற்றம் இருப்பதாகக் கூறினார்.

webdunia photoWD
இந்தப் பூஜையில் கலந்துகொள்ள வந்த ஜமுனா பாய் என்ற பெண்மணி, தன்னை ஆவி பிடித்திருந்ததாகவும், தொடர்ந்து இப்பூஜையில் கலந்துகொண்டதனால் தான் பெருமளவிற்கு குணமடைந்துவிட்டதாகவும் கூறினார்.

இதற்குக் காரணம் இக்கோயிலில் வீற்றிருக்கும் தத்தேத்ராயா கடவுளின் அருளே என்று அவர் கூறினார்.

இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டதற்கு, இவர்களெல்லாம் ஏதாவது ஒரு வகையில் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும், அவர்களை பைத்தியம் என்று கூறிவிட முடியாது என்றும் கூறினார். அவர்களுக்கு உரிய வகையில் சிகிச்சை அளித்தாலே போதுமானது என்று கூறினர்.

இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையைப் பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள். எங்களுக்கு எழுதுங்கள்.
வீடியோவைப் பாருங்கள்
<< 1 | 2 
புகைப்படத்தில்
ஆவிகளை துரத்தும் மகா ஆரத்தி பூஜை!
மேலும்
காளியை சாந்தப்படுத்த இரத்த ஆகுதி!  
ஆண்களை பெண்கள் அடிக்கும் வினோதத் திருவிழா!  
ஆண் குழந்தை பிறக்க சிகிச்சை அளிக்கும் மருத்துவர்!  
மரணத்தை ஏற்படுத்தும் மான்பூர் மலைப் பாதை!  
மத்திய பிரதேசத்தில் தீ மிதி விழா!  
கொக்கியில் தொங்கி செலுத்தும் நேர்த்திக்கடன்!