கூடியிருந்த நோயாளிகளை நாங்கள் சந்தித்தபோது, அவர்களில் பெரும்பாலானவர்கள் முதல்முறை வந்தவர்கள் என்பது தெரிந்தது. அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்களின் மூலம் மன்சாராம் நிஷாத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு வந்திருந்தனர்.
இதற்கிடையில், மன்சாராம் நிஷாத்தின் சிகிச்சையினால் தாங்கள் குணமடைந்ததாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் அப்படிக் கூறுமாறு சொல்லப்பட்டவர்களாகவே தெரிகிறது.
நிறைய நோயாளிகள் சிகிச்சைக்கு வரத் துவங்கியதில் இருந்து, புதிதாக உணவகங்களும் கடைகளும் இங்கு பெருக ஆரம்பித்து விட்டதையும் எங்களால் காண முடிந்தது.
மன்சாராம் தனது சிகிச்சை அனைத்தையும் கட்டணமின்றி இலவசமாக வழங்குவதாக நோயாளிகள் தெரிவித்தனர். ஆனால், மக்கள் காணிக்கையாக பணத்தையும் பொருட்களையும் அளிக்கின்றனர். ஒவ்வொரு நோயாளியும் தங்கள் சிகிச்சைக்காக மூன்று முறை வரவேண்டும் என்று மன்சாராம் நிஷாத் கூறுகிறார். மூன்று முறையும் காணிக்கை தரப்படுகிறது.
அங்கே கூடியிருந்த நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் படிக்காதவர்களாகவும், ஏழைகளாகவும் மருத்துவ வசதிகளைப் பற்றி அறியாதவர்களாகவும் இருந்தனர். இதனால், அவர்கள் மன்சாராம் நிஷாத்தை நம்புகின்றனர் என்பதை நாங்கள் கண்டோம்.
இந்த வினோதச் சிகிச்சை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எங்களுக்குத் தெரிவியுங்கள்.
|