இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் நோயாளிகளைக் காலால் உதைத்துக் குணப்படுத்தும் வினோதமான சிகிச்சையை செய்யும் ஒருவரை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம். சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள மன்சாராம் நிஷாத் என்பவர் தனது இந்தச் சிகிச்சையின் மூலம் எந்த நோயையும் குணப்படுத்த முடியும் என்கிறார்.
இந்தச் செய்தியை நாங்கள் அறிந்தவுடன், இதுபற்றி தெரிந்து கொள்வதற்காகச் சத்தீஷ்கரை நோக்கிப் பயணித்தோம். மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 75 கி.மீ. தொலைவிலும், தம்தரி நகரில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும் உள்ள லேடர் என்ற கிராமத்தில்தான் மன்சாராம் நிஷாத் இருக்கிறார்.
லேடரை நாங்கள் அடைந்ததும், தங்கள் நோய்க்குச் சிகிச்சை பெறுவதற்காகக் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கண்டோம். சிறிது நேரத்திற்குப் பிறகு, மன்சாராம் நிஷாத் ஒரு மரத்திற்கு அடியில் வந்து அமர்ந்தார். பின்னர் ஒவ்வொரு நோயாளியாக அழைத்துக் காலால் உதைத்தும் கையால் குத்தியும் தனனுடைய சிகிச்சையைத் துவங்கினார். மற்றவர்கள் தங்களின் முறைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தில் ஈடுபட்டிருந்த போது, தான் கண்ட கனவில் தோன்றிய தெய்வம், இந்த முறையில் மக்களை குணப்படுத்துமாறு தனக்கு அருளியதாக மன்சாராம் நிஷாத் கூறுகிறார். இதைவிட, தான் பல ஆண்டுகளாக எதையும் சாப்பிடவில்லை என்று அவர் கூறுவதுதான் மிகவும் ஆச்சரியம் ஆகும். இதனால், ஒவ்வொரு கடவுளின் சக்தியும் தனக்குக் கிடைப்பதாக அவர் கூறுகிறார்.
|