இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது. கிராமங்களில் நடைபெறும் விழாக்கள் எப்பொழுதும் நம் நெஞ்சை விட்டு அகலாதவையாகும். பொதுவாக எல்லா விழாக்களிலும் பெரும் திரளாக பங்கேற்கும் மக்கள், அங்கு விற்கப்படும் பொருட்களை வாங்குவதிலும், அங்கு நிகழ்த்தப்படும் கேளிக்கைகளிலும் பங்கேற்பதுமாக இருப்பர். ஆனால், சில விழாக்கள் விதிவிலக்கானவை. அதனாலேயே அவைகள் ஏராளமான மக்களை கவர்கின்றன.
இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் நாங்கள் ஒரு கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்லப் போகின்றோம். அங்கு விழாவிற்கான அனைத்து அம்சங்களுடன் ஆவிகளும் உலா வருகின்றன. நம்ப முடியவில்லை அல்லவா? ஆனால் உண்மை. மராட்டிய மாநிலம் சல்கோவான் மாவட்டத்தில் உள்ள சொராவத் என்ற இடத்தில் இந்த ஆவிகளின் விழா நடைபெறுகிறது. பூதங்கா மேளா என்று அதற்குப் பெயர். அதாவது ஆவிகளின் விழா.
ஒவ்வொரு ஆண்டும் தத்தா ஜெயந்தி அன்று இந்த விழா நடைபெறுகிறது. பேய், பிசாசு போன்ற ஆவி பிடித்தவர்கள் இந்த விழாவை நோக்கி ஈர்க்கப்படுவதாகவும், இந்த விழாவில் பங்கேற்றுத் திரும்பும் போது அவர்களை விட்டு அந்த ஆவிகள் விலகிவிடுவதாகவும் இங்குள்ள மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
இதுகுறித்து கேள்விபட்டதும் சொராவாத் கிராமத்திற்குச் சென்றோம். போகும் வழியிலேயே நோயாளிகளைப் போல காணப்பட்ட ஓரிருவரை கண்டோம். அவர்களிடம் நாங்கள் பேச முற்பட்டபோது, அவர்களுக்கு ஆவியின் பிடியில் சிக்கியுள்ளதாக அவர்களோடு இருந்தவர்கள் கூறினர். அதனால் இந்த தத்தா விழாவிற்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினர்.
|