குழந்தை பாக்கியம் என்பது கடவுள் அளிக்கும் பெரு வரமாகும். ஒவ்வொரு தம்பதிகளுக்கும், அவர்களது குழந்தையின் முதல் அழுகைக் குரலைக் கேட்ட நொடிப்பொழுதுதான் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய நேரமாக இருக்கும். குழந்தை பாக்கியம் என்பதுதான் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம் என்பார்கள். இதுபோல் குழந்தை இல்லாதவர்கள் அடையும் துயரத்தை அளவிட்டு சொல்ல இயலாது.
குழந்தைக்காக ஒருவன் எதையுமே செய்யத் தயாராக இருப்பான். ஒரு பக்கம் கடவுளின் நீதிமன்றத்தில் அவரது அருளுக்காக தலைதாழ்த்திக் காத்திருப்பதும், மறுபக்கத்தில் குழந்தைப்பேறுக்காக மருத்துவர்களின் உதவியை நாடுவதிலும், சில சமயங்களில் போலி வழிகளை கண்மூடித்தனமாக நம்பி ஏமாறுவதும் உண்டு. இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் பக்தர்கள் குழந்தைப் பேறுக்காக பிரார்த்திக்கும் இந்தூரில் உள்ள மா அம்பவாலி என்ற கோயிலை அறிமுகப்படுத்துகிறோம்.
இந்த கோயிலின் மூல தெய்வம் மா கால்ராத்ரியாகும். இந்தக் கோயிலில் உள்ள மா கால்ராத்ரியை வணங்கி இவ்வாறு வேண்டுதலை நிறைவேற்றுபவர்கள் அனைவருக்கும் தாயின் அருளாசி கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இந்தக் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
இந்த கோயிலைப் பற்றி அறிந்ததுமே அங்கு புறப்பட்டோம். இரவு 10 மணி இருக்கும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் அந்த கோயிலில் குழுமியிருந்தனர். ஒரு சிலர் குழந்தை பாக்கியம் வேண்டி கடவுளை பிரார்த்திக்கவும், ஒரு சிலர் குழந்தை பாக்கியம் கிட்டியதற்கு மா கால்ராத்ரிக்கு நன்றி கூறி காணிக்கை செலுத்தவும் அங்கு வந்திருந்தனர்.
அங்கு வந்திருந்த பக்தர்களில் ஒருவரான சஞ்சய் அம்பாரியா நம்மிடம் கூறுகையில், எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லை. எனது நண்பர் ஒருவர் இந்த கோயில் பற்றி கூறினார். நானும் இங்கு வந்து தாயை வழிபட்டப் பிறகு எனக்கு குழந்தை பாக்கியம் கிட்டிற்று என்றார்.
இந்த பிரார்த்தனை கொஞ்சம் வித்யாசமானது. தங்களது ஆசைகளை தாயிடம் கூறும்போது 3 தேங்காய்களை காணிக்கையாக அளிக்கின்றனர். அப்போது அந்த கோயிலின் குருக்கள், பக்தரின் கழுத்தில் கயிறு ஒன்றை கட்டி விடுகிறார். அது 5 வாரங்கள் கழுத்தில் இருக்க வேண்டும். எப்போது பக்தரின் வேண்டுகோள் நிறைவேறுகிறதோ அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் 5 தேங்காய்களை அந்த பக்தர் கட்டிவிட வேண்டும்.
|