முதன்மை பக்கம்  ஆன்மிகம் > நம்பினால் நம்புங்கள் > கட்டுரை
 
‌‌தீபாவ‌ளி : நவீன யுகத்தில் நெருப்புப் போர்!
webdunia photoWD
இந்த அபாயகரமான யுத்த விளையாட்டில் 40 முதல் 50 பேர் வரை காயமடைகின்றனர். ஆயினும் இப்போரில் ஈடுபடும் அக்கிராம மக்களுக்கு உற்சாகம் குறைவதில்லை. இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெளியூர்களில் இருந்தாலும் இப்போரைக் காண்பதற்கென்றே தங்களது கிராமத்திற்கு வருகின்றனர்.

இந்த விளையாட்டுப் போர் பாரம்பரியம் எப்போது துவங்கியது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இதனைக் காண்பதற்கு கெளதம்புராவில் குழுமுகிறார்கள். போர் துவங்குவதற்கு முன் அனைவரும் பிரார்த்தனை செய்கின்றனர். போர் துவங்கி ஒரு அணியின் மீது மற்றொரு அணி தங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் தீரும் வரை போர் நடைபெறுகிறது.

இந்த விளையாட்டைப் போலவே ஹிங்கோட்டை ஆயுதமாக்கும் அந்தச் செயலும் அபாயகரமானதுதான். ஹிங்கோட்டில் வெடிபொருளை நிரப்பும்போதே அது வெடித்ததாகவும், அதனால் பல நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இந்தப் போர் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் முதலில் நன்கு குடித்துவிட்டுத்தான் களமிறங்குகின்றனர். போரின் போது கலவரம் ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுக்க அதிரடி காவற்படைப் பிரிவுகள் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

webdunia photoWD
இந்த விளையாட்டை தீபாவளியின் ஒரு முக்கிய அங்கமாக புத்தாடை உடுத்தி அக்கிராமத்தினர் கொண்டாடுகின்றனர். விளையாட்டு முடிவு சிலருக்கு சோகமாகி விடுகிறது. இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். எங்களுக்கு எழுதுங்கள்.
வீடியோவைப் பாருங்கள்
 << 1 | 2   
புகைப்பட கேலரி
நவீன யுகத்தில் நெருப்புப் போர்!
மேலும்
நாக்கை அறுத்து காணிக்கை!  
நெய் ஆறாக ஓடும் ரூபால் கிராமம்!  
நாடி ஜோதிடம் : ஓலைச் சுவடிகளில் நமது வாழ்வும் விதியும்!  
நிறம் மாறிய சிவலிங்கம்!  
சாச்சாவா : பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சிகிச்சை!  
லிங்கம் வளரும் மகாகாலேஸ்வர் கோயில்!