முதன்மை பக்கம்  ஆன்மிகம் > நம்பினால் நம்புங்கள் > கட்டுரை
 
‌‌தீபாவ‌ளி : நவீன யுகத்தில் நெருப்புப் போர்!
Webdunia
கெளதம்புராவில் அச்சத்தையூட்டும் பாரம்பரியப் போர்!

webdunia photoWD
வண்ண விளக்குகள் ஏற்றி, பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி முடித்த உங்களுக்கு, இப்பண்டிகையை அச்சம்தரும் முறையில் கொண்டாடப்படுவதை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தூர் நகரில் இருந்து 55 கி.மீ. தூரத்தில் உள்ள கெளதம்புரா என்ற இடத்தில் ஹிங்கோட் போர் எனும் பாரம்பரிய போர் விளையாட்டை உங்களுக்கு காட்டப் போகின்றோம்.

ஒரு போரைப் போல இந்த பாரம்பரிய விளையாட்டு கெளதம்புராவில் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் நடைபெறுகிறது. இந்தப் போர் விளையாட்டில் ஈடுபடும் கெளதம்புரா கிராமத்தினர் பலர் காயமடைகின்றனர். ஆயினும் அவர்கள் துணிச்சலை இழப்பதில்லை.

webdunia photoWD
ஹிங்கோட் எனும் முள் செடியில் காய்க்கும் பழத்தை எடுத்து அதன் உள்ளீடுகளை அகற்றிவிட்டு ஒரு மாதம் வரை நன்கு காயவைத்து அதற்குள் பட்டாசில் பயன்படுத்தப்படும் வெடிக்கும் பொருட்களை நிரப்பி அவற்றை மூடி அதன்மீது மூங்கில் குச்சிகளை கட்டி, களிமண்ணால் பூசி பார்ப்பதற்கு ராக்கெட் போல தெரியும் ஆயுதங்களை உருவாக்குகின்றனர்.

தீபாவளி பண்டிகையின் இரண்டாவது நாளன்று இந்த ஹிங்கோட் போர் நடத்தப்படுகிறது. கெளதம்புராவைச் சேர்ந்த கிராமத்தினர் காலங்கா, துர்ரா என்ற இரண்டு பிரிவினராகப் பிரிந்து எதிரும் புதிருமாக நின்று போரிடுகின்றனர். ஒரு அணி மற்றொரு அணியின் மீது ஹிங்கோட்டை வீசுகிறது. அது மறுபக்கத்தில் விழுந்து வெடிக்கிறது. அந்த அணியும் இதேபோன்று ஹிங்கோட் ராக்கெட்டை வீசுகிறது. அது மறுபக்கத்தில் விழுந்து வெடிக்கிறது.
வீடியோவைப் பாருங்கள்
  1 | 2  >> 
புகைப்பட கேலரி
நவீன யுகத்தில் நெருப்புப் போர்!
மேலும்
நாக்கை அறுத்து காணிக்கை!  
நெய் ஆறாக ஓடும் ரூபால் கிராமம்!  
நாடி ஜோதிடம் : ஓலைச் சுவடிகளில் நமது வாழ்வும் விதியும்!  
நிறம் மாறிய சிவலிங்கம்!  
சாச்சாவா : பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சிகிச்சை!  
லிங்கம் வளரும் மகாகாலேஸ்வர் கோயில்!