பக்தர்களின் நலன் காக்க அவர்கள் முன் கடவுள் தோன்றுவாரா? மனிதர்களைப் போல ஒரு சிலை வளர முடியுமா? இப்படிப்பட்ட அதிசயங்கள் நிஜ வாழ்வில் நடப்பதுண்டா? இந்தக் கேள்விகளுக்கு யாராலும் பதிலளிக்க முடியாது. ஆனால் ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஆச்சரியங்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். சில நேரங்களில் கடவுளை மரங்களில் பார்க்கிறார்கள், சில நேரங்களில் இறைவனுக்கு அளிக்கப்படும் காணிக்கை அவர்கள் கண் முன்னாலேயே மறைந்துவிடுகிறது.
நம்பினால் நம்புங்கள் தொடரில் இதைப் போல ஆச்சரியமான ஒரு கோயிலிற்கு அழைத்துச் செல்கின்றோம். இந்தக் கோயிலைப் பற்றிய கதையை படியுங்கள். அதன்பிறகு இதனை நம்புவதா? அல்லது மூடநம்பிக்கை என்று புறக்கணிப்பதா? என்பதனை முடிவு செய்யுங்கள்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேவாஸ் நகரில் உள்ள மகாகலேஸ்வர் கோயிலை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். பல ஆயிரம் பக்தர்கள் பற்றுறுதி கொண்ட கோயில் இது. இக்கோயிலில் அமைந்துள்ள சிவலிங்கம் சுயமாகத் தோன்றியது என்றும், அது தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும் இந்நகரில் வாழும் பக்தர்களும், கோயிலிற்கு அடிக்கடி வருபவர்களும் கூறுகின்றனர். அவர்கள் கூறுவது உண்மையான என்பதனை அறிய அங்கு சென்றோம்.
நாங்கள் அந்தக் கோயிலிற்குச் சென்றபோது சில பக்தர்கள் சிவலிங்கத்திற்கு வழிபாடு செய்து கொண்டிருந்தனர். தங்களுடைய எதிர்பார்ப்புக்களை மகாகாலேஸ்வர் நிறைவேற்றுவதாகக் கூறுகின்றனர். நாம் ஏற்கனவே அறிமுகப்படுத்திய உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாள் கோயிலில் இருந்த சிவலிங்கத்தைப் போன்றே இந்தக் கோயிலின் சிவலிங்கமும் இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவெனில் மகாகாள் கோயிலில் உள்ள சிவலிங்கம் சுருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தத் திருக்கோயிலில் உள்ள சிவலிங்கம் வளர்ந்துக் கொண்டிருக்கிறது!
இக்கோயிலிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் ராதாகிருஷ்ணன் என்பவர், தான் சிறு பிள்ளையாய் இருந்த காலம் முதல் இக்கோயிலிற்கு வருவதாகவும், சிவலிங்கத்தின் உயரம் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். ஒவ்வொரு சிவராத்தி அன்றும் லிங்கம் வளர்கிறது என்று கூறுகின்றனர். ஆனால், அந்த வளர்ச்சி மிகக் குறைவாக இருப்பதால் நான்கைந்து ஆண்டுகளுக்குப் பிறகே அதனை உணர முடியும் என்று கூறுகின்றனர். இந்த லிங்கம் சுயம்புவாக தோன்றியது என்பதற்கு ஒரு புராணம் உள்ளது.
|