முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > பூ‌ர்‌வீக ஞான‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கத்திரியில் குழந்தை பிறந்தால் கெட்டது என்பது?  Search similar articles
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

கத்திரியில் என்ன செய்யக் கூடாது என்று சில நூல்கள் சொல்கின்றன. கத்திரியில் சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வெப்ப அலைகள் அதிகமாக இருக்கும். வெப்பம் இயல்பு நிலையைத் தாண்டி இருக்கும்.

விதையில் இருக்கும் உயிரணுக்கள் இந்த வெப்ப அலைகளால் பாதிக்கப்படும். அதனால்தான் கத்திரியில் நெல் விதை போன்றவைகளை காய வைக்கக் கூடாது என்பார்கள்.

விதை நெல்லை வைத்து நாற்று விடுவார்கள் அல்லவா அதையும் செய்யக் கூடாது. சித்திரையில் குறிப்பாக கத்திரியில் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதும் நல்லது.

சூரியனில் ஹீலியம் அணுக்கள் அதிகம் உள்ளன. இந்த ஹீலியம் அணுக்கள் இயல்பாகவே உயிர் முடிச்சு வரைப்போய் தாக்கக் கூடியவை.

இந்த காலத்தில் புற ஊதாக் கதிர்கள் வெளியீடு அதிகமாக இருக்கும். எனவேதான் அந்த காலத்தில் கத்திரியில் சுபக் காரியங்கள் எதையும் செய்ய மாட்டார்கள்.

அந்த மாதிரி நாட்களில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததும் அன்னப் படையல், திருவிழா போன்றவற்றை வைத்தனர்.

மரக்கன்று நடுதல் போன்றவையும் கூடாது. சித்திரையில் உடலுறவு கொண்டு உருவாகும் குழந்தைக்கு நிச்சயமாக ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்படும். அதேப்போலதான் சித்திரை மாதம் அல்லது அக்னி நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைக்கு ஒவ்வாமை அல்லது வருத்தம் தரக் கூடிய அல்லது மன வருத்தம் இருக்கும் சூழ்நிலை ஏற்படும்.

சித்திரையில் பிறக்கும் குழந்தைகளுக்கு சின்னதாகக் கூட ஒரு சில குறைபாடுகள் இருப்பதை பார்த்துள்ளோம்.

ஆனால் அதே சமயம் சித்திரையில் மற்ற காரியங்களைச் செய்யலாம். புதிதாக தொழில் துவங்குவது, தானங்கள் செய்வது, புதுமனை புகுதுல் போன்று எதையும் செய்யலாம். உயிரணுக்கள் தொடர்பான சிலவற்றை மட்டும்தான் செய்யக் கூடாது என்கிறார்களேத் தவிர ஒட்டுமொத்தமாக எதையுமே செய்யக் கூடாது என்று சொல்வதில்லை.

அக்னி நட்சத்திரம் என்பது என்ன?...
1 | 2  >>  
மேலும்
குழந்தை‌யி‌ன் பெயர் இந்த எழுத்தில் துவங்க வேண்டும் என்று கூறுவது ஏற்கத்தக்கதா?
பில்லி, சூன்யத்தில் இருந்து எப்படி காத்துக் கொள்வது?
சாமுத்ரிகா லட்சணம் என்றால்...
மச்சங்களைப் பற்றி விள‌க்கமாக‌ச் சொ‌ல்லு‌ங்கள்!
திருஷ்டிக்காக கட்டப்படும் படிகாரக் கல்லின் குணங்கள் என்ன?
வடக்கு திசையில் தலை வைத்துத் தூங்கக் கூடாது ஏன்?