முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > பூ‌ர்‌வீக ஞான‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
திருஷ்டிக்காக கட்டப்படும் படிகாரக் கல்லின் குணங்கள் என்ன?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
drishti
webdunia photoWD
மக்களின் ஒட்டுமொத்தப் பார்வையை திசை திருப்புவது. வீட்டிற்குள் வரும்போது உங்கள் புதிய வாகனத்தைப் பார்க்கிறார்கள். அப்போது அதற்கு முன்பு இந்த திருஷ்டிப் பொருள் ஆடிக் கொண்டிருந்தால் அந்த பார்வையை அது ஈர்த்துக் கொள்ளும். இது உளவியல் ரீதியாகச் சொல்வது.

ஜோதிடப்படி பார்த்தால், ஜீவக் கனியான எலுமிச்சைக்கு எதிர்மறையான சக்திகளை ஈர்த்து அழிக்கக் கூடிய சக்தி கொண்டது. அதனால்தான் எலுமிச்சையை வைக்கிறோம்.

உயிர் பலி கொடுப்பது என்பது உயிர் உள்ளவற்றைத்தானே நாம் பலி கொடுப்போம். எலுமிச்சை ஒரு ஜீவ கனி என்பதால்தான் புது வாகனம் வாங்கிய உடன் வாகனத்தின் டயருக்கு கீழே எலுமிச்சையை வைத்து அதன் மீது ஏற்றி இறக்குவோம். எனவே அந்த டயருக்குத் தேவையான உயிர் பலி கொடுத்தாகிவிட்டது, மேற்கொண்ட எந்த உயிர்பலியும் வாங்கக் கூடாது என்பதுதான் அதற்கு காரணம்.

படிகாரம் இயல்பாகவே திருஷ்டி எடுக்கக் கூடிய சக்தி கொண்டது.

ஊர்களில் எல்லாம் பல இடங்களில் படிகாரத்தைப் பயன்படுத்துவார்கள். நீரைத் தூய்மைப்படுத்த, மருத்துவத்திற்காக எல்லாம் பயன்படுத்துவார்கள்.

அறிவியல் பூர்வமாக பார்த்தால் கால்சியம் அதிகமாக இருக்கிறது. எனவே அந்த தாது உப்பு, எலுமிச்சையின் சிட்ரிக் அமிலம், பச்சை மிளகாயின் காரம் போன்றவற்றிற்கு துர்தேவதைகளை தடுக்கும் சக்தி கொண்டவை.

துர் தேவதைகள் என்றால் என்ன?

துர் தேவதைகள் பல வகைப்படும். துர் மரணம் அடைபவர்கள் பெரும்பாலும் இறைவனிடம் ஐக்கியமாவதில்லை. அவர்கள் எதிர்பாராத வகையில், எதிர்பாராத வயதில் மரணம் சம்பவிக்கும். அவர்களது நிறைவேறாத ஆசைகளால் அவர்களது ஸ்தூல தேகம் உலவிக் கொண்டிருக்கும். அவ்வப்போது இந்த ஆவிகள் வருவதைத்தான் துர்தேவதைகள் என்று சொல்கிறோம்.

1 | 2  >>  
மேலும்
வடக்கு திசையில் தலை வைத்துத் தூங்கக் கூடாது ஏன்?
விபரீத ராஜ யோகம் என்றால் என்ன?
நாக தோஷம் என்றால்...
ஜென்ம குரு என்றால் என்ன?
கோயில் குளங்களுக்கு உள்ள முக்கியத்துவம் என்ன?
சித்திரையின் சிறப்புகள்