ரா‌சி பல‌ன் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | எ‌ண் ஜோ‌திட‌ம் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்
முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் » மீனம்:
‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Feedback Print Bookmark and Share
 
கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்த கேது பகவா‌ன், இப்பொழுது உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணியாதிபதி வீடான ஐந்தாம் வீட்டிற்கு வந்து அமர்கிறார். ஆன்மீகத்தில் நாட்டத்தை அதிகப்படுத்துவார். 16. 12. 2008 முதல் 25. 8. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் எதிலும் வெற்றியே கிட்டும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்கள். குடும்பத்திலும் அமைதியும், மகிழ்ச்சியும் தங்கும். அரசாங்கத்தாலும், அரசியல்வாதிகளாலும் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். சேமித்து வைத்த பணத்தில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீண் அலைச்சலாலும், திடீர்ப் பயணங்களாலும் தூக்கமின்றி தவித்தீர்களே, உடல் உஷ்ணம் அதிகமாகி அடிவயிற்றில் வலி வந்து அவஸ்தைப்பட்டீர்களே, இனி வாடிய முகம் மலரும். கலைத்துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.

26. 8. 2009 முதல் 27. 10. 2009 வரை தடைபட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த தொடர் யுத்தமெல்லாம் மாறும். உங்கள் வார்த்தையை, ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் இருந்த நெருக்கடி நீங்கும். கம்ப்யூட்டர், செல்போன் வகைகளால் லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி வகைகளாலும் ஆதாயம் வரும். உத்யோகத்தில் வெகு நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள் உயர்வு எல்லாம் இனி உங்கள் சீட்டைத் தேடி வரும். கணினி துறையிலிருப்பவர்களுக்கு புது சலுகைகள் கிடைக்கும்.

பரிகாரம்:

திருத்தணிக்கு அருகிலுள்ள திருவலங்காட்டில் வீற்றிருக்கும் வண்டார் குழவியம்மை உடனுறை வடரண்யேஸ்வரரை தரிசித்து வணங்குங்கள்.