ரா‌சி பல‌ன் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | எ‌ண் ஜோ‌திட‌ம் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்
முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் » கும்பம்:
‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Feedback Print Bookmark and Share
 
கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்துக் கொண்டு பிரச்சனைகளின் உச்சிக்கே கேது அழைத்துச் சென்றாரே! மனைவியைப் பிரிந்து வாடினீர்களே! ஆத்திரத்தால் நிம்மதியை இழந்தீர்களே!

9. 4. 2008 முதல் 15. 12. 2008 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களின் தோற்றப்பொலிவு கூடும். கையில் காசு, பணம் புரளும். பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். குடும்பத்தில் மதிக்கப்படுவீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். ஆறில் வந்திருக்கும் கேது அத்தனைக் கடனையும் தீர்த்துவிடும் அளவிற்கு வருமானத்தை அதிகம் தருவார். வீடு, மனை வாங்குவதற்கு புதிய வங்கிக் கடன் வாங்குவீர்கள். ஆரோக்கியம் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை நீங்கும். எத்தனையோ கோவில்கள் ஏறி இறங்கியும் திருமணத் தடை நீங்க வில்லையே என கவலைப்பட்டவர்களுக்கு தடை நீங்கி திருமணம் நடைபெறும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைக்கும்.

16. 12. 2008 முதல் 25. 8. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் எதிலும் வெற்றியே கிட்டும். பணப் பிரச்சனை அகலும். வழக்குகளில் புத்தி சாதுர்யத்துடன் பேசி வெற்றியடைவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எப்போதுமே டென்ஷனாக பேசிய நீங்கள் இனி பாசத்துடன் பேசுவீர்கள். உயர் ரக ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். கௌரவ பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் வி. ஐ. பி.க்களின் தொடர்பு அதிகரிக்கும்.

பரிகாரம்:

திருவண்ணாமலை, செஞ்சி அருகிலுள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியை வணங்குங்கள்.