கர்மத்தால் வந்தவற்றைத் தருமத்தால் தொலைக்க வேண்டும் என்ற பழமொழியை அறிந்த நீங்கள், முற்பிறவி சூட்சுமத்தை உணர்ந்து, இப்பிறவியில் எந்த பழிபாவமும் வராதபடி தர்மத்தின் வழியில் செல்லுவீர்கள்.
இதுவரை உங்கள் ராசியில் நின்ற ராகுவும், ராசிக்கு ஏழாம் வீட்டில் நின்ற கேதுவும் உங்களை பல வழிகளில் வாட்டி வதைத்தனர். இப்பொழுது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
இராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு எப்போது பார்த்தாலும் கால் வலி, காது வலி, தலை வலி, தலை சுற்றல் என புலம்பித் தவிக்க வைத்த ராகு பகவான் இப்பொழுது பனிரெண்டாம் வீட்டிற்கு வந்தமர்வதால் நோய் நீங்கும், உற்சாகம் ததும்பும். இளமை, அழகு கூடும். இனி எப்போதுமே முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். விலகிச் சென்றவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். சிலருக்கு பரிதாபப்பட்டு நீங்களே சிக்கலில் மாட்டிக் கொண்டீர்களே! அந்த பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். 9. 4. 2008 முதல் 10. 6. 2008 வரை அவிட்டம் 3, 4ம் பாதத்தினர் கொஞ்சம் கவனமாக செயல்படுவது நல்லது. மன உளைச்சல், வீண் சந்தேகம் வரக்கூடும்.
11. 6. 2008 முதல் 21. 4. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிப் பொங்கும். கணவன் - மனைவியிடையே பாசப்பிணைப்பு அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்கள் விலகும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். கோவிலுக்குச் சென்று வருவீர்கள். வெளியூர் பயணங்களால் மன நிம்மதி அடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பிரபலங்களின் நட்புக் கிட்டும். பிள்ளைகளின் நீண்ட நாள் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். தூரத்து உறவினர்களின் வருகை உண்டு. வீட்டில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். கடன் கொடுத்தவர்களிடம் இருந்து வட்டியுடன் பணம் கைக்கு வந்து சேரும். வழக்குகளில் வெற்றிக் கிட்டும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். அரசால் ஆதாயம் உண்டு. அரசாங்க அதிகாரிகள் பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள். 22. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. அலைச்சலும், செலவுகளும் நீங்கும். செலவுகளை குறைத்து சிக்கனத்தைக் கையாளுவீர்கள்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை உங்களின் திறமையால் வெல்வீர்கள். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை மாற்றம் செய்வீர்கள். விலகிச் சென்ற வேலையாட்கள் மீண்டும் உங்களிடமே வந்து சேர்வார்கள். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளை செய்வீர்கள். ஏற்றுமதி - இறக்குமதியால் அதிக லாபம் வரும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் அவர்களின் தவறை உணர்ந்து மீண்டும் வருவார்கள்.
உத்யோகத்தில் புதிய கண்டுபிடிப்புகளால் மேலதிகாரியின் பரிசையும் பாராட்டையும் பெறுவீர்கள். உயரதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். பதவி உயர்வுக் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். கணிணி துறையில் இருப்பவர்களுக்கு அயல்நாட்டு நிறுவனத்தின் வாய்ப்புக் கிடைக்கும்.
கேதுவின் பலன்கள் அடுத்த பக்கத்தில்...
|