ரா‌சி பல‌ன் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | எ‌ண் ஜோ‌திட‌ம் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்
முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் » மகரம்:
‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Feedback Print Bookmark and Share
 
கேதுவின் பலன்கள் :

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு உங்களை ஏகத்துக்கும் கஷ்டப்பட வைத்த கேது, இப்பொழுது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். உங்களின் தோற்றப்பொலிவு கூடும். மன உளைச்சல், வீண் டென்ஷன் குறையும். 9. 4. 2008 முதல் 15. 12. 2008 முடிய உள்ள காலகட்டங்களில் புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வி.ஐ.பி.கள் உதவுவார்கள். தடைபட்ட காரியங்கள் முடியும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அவ்வப்போது சிந்திப்பீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொஞ்சம் குடும்பத்தில் காரசாரமான விவாதங்கள் வந்துபோகும், என்றாலும் கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவீர்கள்.

16. 12. 2008 முதல் 25. 8. 2009 வரை எதிலும் மகிழ்ச்சி கிட்டும். பால்ய நண்பர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். வியாபாரத்தில் லாபம் உண்டு. போட்டிகளுக்கு பதிலடி கொடுப்பீர்கள். பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனையை ஏற்பார்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். வேலையாட்களிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். கணினி துறையினர்களுக்கு பதவி உயர்வுடன் சலுகைகளும் கிடைக்கும்.

பரிகாரம்:
திருச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ மட்டுவார்குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவரை வணங்குங்கள்.