ரா‌சி பல‌ன் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | எ‌ண் ஜோ‌திட‌ம் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்
முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் » மகரம்:
‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Feedback Print Bookmark and Share
 
magaram
webdunia photoWD
எளியாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வம் அடிக்கும் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்த நீங்கள், வசதி வாய்ப்புகளுடன் வளர்ந்து வந்தாலும் ஏழை எளியோரை அனுசரித்துப் போவீர்கள்.

இதுவரை உங்களின் ராசிக்கு இரண்டாம் வீட்டில் ராகுவும், எட்டாவது வீட்டில் கேதுவும் உட்கார்ந்து கொண்டு கொஞ்சம் அலைக்கழித்தாலும் திடீர்த் திருப்பங்களையும் தந்தனர். இப்போது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் தங்களின் கதிர் வீச்சால் எப்படி உங்களை மாற்றப்போகிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் உட்கார்ந்து கொஞ்சம் அலைச்சலையும், காரியத்தடைகளையும் கொடுத்துவந்த ராகு, இப்பொழுது ராசியிலேயே வந்து அமர்வதால் இனி பேச்சில் முதிர்ச்சி தெரியும். சிலர் உங்களை அவமதித்து பேசினாலும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.

குடும்பத்தில் சின்ன சின்ன சச்சரவுகள் வந்துப் போகும். கணவன் -மனைவிக்குள் வாக்குவாதங்கள் நீடிக்கும். பிள்ளைகளின் திருமணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள். 9. 4. 2008 முதல் 10. 6. 2008 முடிய உள்ள காலகட்டங்களில் ஆவிட்டம் நட்சத்திக்காரர்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. செலவுகள் துரத்தும். வீண் பகை, உறவினர்களில் சிலர் உங்களின் நிலைமையை புரிந்துகொள்ளாமல் உதவிக் கேட்டு நச்சரிப்பார்கள். நண்பர்களின் உதவிக் கிட்டும். வழக்கில் தீர்ப்புச் சற்று தாமதமாகும். ஷேர், ஸ்பெகுலேஷன் வகையில் பணம் வரும். 11. 6. 2008 முதல் 21. 4. 2009 முடிய உள்ள காலகட்டத்தில் திருவோணம் நட்சத்திரக்காரர்கள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். இராசியில் நிற்கும் ராகு யோகா, தியானம், மூலிகை வகைகளில் ஆர்வம் காட்டச் செய்வார். வேற்று மதத்தவர், மாநிலத்தவர்கள் மூலமாக ஆதாயம் அடைவீர்கள்.

கன்னிப் பெண்கள் பெற்றோரின் ஆலோசனையின்றி செயல்படவேண்டாம். 22. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலங்களில் உத்திரம் நட்சத்திரக்காரர்கள் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வழக்கு விவகாரங்களில் நிதானம் தேவை.

வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். பண வரவு திருப்திகரமாக இருந்தாலும் வரவுக்கேற்ப செலவும் இருக்கும். வேலையாட்கள் சம்பளப் பாக்கியால் சிறு சிறு பிரச்சனைகள் வந்து நீங்கும். உங்களிடம் ஒப்படைத்த வேலையை மற்றவர்களை நம்பாமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களையும் பாதுக்காப்பது நல்லது. புது ஆர்டர்கள், ஏஜென்சிகளை போராடி பெறுவீர்கள். அரசு விடயங்களில் அலட்சியப்போக்கு வேண்டாம். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். தடைபட்ட உரிமைகளும், சலுகைகளும் உடனே கிடைக்கும். அயல்நாட்டில் பணி புரிவீர்கள். மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கேதுவின் பலன்கள் அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ல்..