ரா‌சி பல‌ன் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | எ‌ண் ஜோ‌திட‌ம் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்
முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் » விருச்சிகம்:
‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Feedback Print Bookmark and Share
 
கேதுவின் பலன்கள்:

இதுவரையில் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்து ஒரு வேலையையும் முழுமையாக செய்ய விடாமல் அலைகழித்த கேது இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்கிறார்.

உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களைப் பாராட்டுவார்கள். முன்பெல்லாம் குடும்பத்தில் கவனம் செலுத்தாது பொறுப்பின்றி அலைந்து திரிந்த நீங்கள். இனி குடும்பத்திற்காகவே உழைப்பீர்கள். 26. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் உங்களின் நிலைமையை புரிந்துக் கொள்வார்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தந்தை வழி சொத்துக்களால் அலைச்சல்களும், செலவுகளும் ஏற்படும். பத்திரங்களை கவனமாக கையாளப்பாருங்கள். வேலையின்றி திரிந்தவர்களுக்கு நல்ல வேலைக் கிடைக்கும்.

உத்யோகத்தில் அதிகாரிகளால் ஏற்பட்ட சில மனக்கசப்புகள் விலகும். திறமைகள் வெளிப்படும். நீங்கள் விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள உங்களை அவமானப்படுத்தி பேசினார்களே, அந்த நிலை மாறும். உங்களின் ஆலோசனையைக் கேட்பார்கள். புதிய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சிக்கனமாக செலவு செய்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

பரிகாரம்:

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் வீற்றிருக்கும் குன்றமுலைநாயகி உடனுறை சண்பகாரணியேசுரரை அங்குள்ள நாகத்தீர்த்தம் சூரிய புஷ்கரணியில் நீராடி, நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.